Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணிணிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?

August 7, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணிணிக் கொள்வனவில் 2 கோடியே 76
இலட்சம் முறைகேடு? – வழங்குநர்,  தொழில்நுட்ப குழுவின் பரிந்துரை படியே
கொள்வனவு இடம்பெற்றது- அமைச்சின் செயலாளர்

வடக்கு மாகாண கல்வி  திணைக்களத்தினால் 240 கணிணிகள் கொள்வனவு செய்வதற்கு
மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக   கூறுவிலை
கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு
கடிதம்  ஒன்றை எழுதியுள்ளனர். குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண
ஆளுநர், பிரதம செயலாளர்  உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.

குறித்த  கடிதத்தில்  வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் கோரிய கூறு விலை
பிரகாரம் 240 கணிணிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது
நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே
குறைவானதாகவும் இருந்ததாகவும். ஆனால் 16.07.2021  திகதிய  கொள்வனவு
கடிதத்திற்கு அமைவாக தங்களின் விலையினை விடம ஒரு கணிணிக்கு 11500.00 ரூபா
அதிக விலையினை கொண்ட  வழங்குனரிடம் கொள்வனவு  செய்ய கொள்வனவு கட்டளை
அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி 11500 x 240 = 2760000.00 ரூபா அதிக விலை
செலுத்தப்படவுள்ளதாகவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி  அமைச்சின் செயலாளருடன் ஒருவரை
தொடர்பு கொண்டு வினவிய போது  குறித்த விடயம் தொடர்பில் எமக்கும் கடிதம்
கிடைப்பெற்றது. எனவே இது தொடர்பான விளக்கம்  ஆளுநருக்கு
அனுப்பட்டுள்ளது. 240 கணிணிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு
செய்தவரிடம் கணிணிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என  தொழிநுட்ப
குழு பரிந்துரைத்துள்ளது. எனவே தொழிநுட்ப  குழுவின் பரிந்துரைக்கு
அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.

Previous Post

கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம் அழைப்பு.

Next Post

கொழும்பில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்; பொலிஸார் விசாரணை.

Next Post

கொழும்பில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்; பொலிஸார் விசாரணை.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.