Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ராஜபக்சாக்களே நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் : சம்பிக்க பகிரங்கம்

July 19, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ராஜபக்சாக்களே நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் : சம்பிக்க பகிரங்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையயை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் ராஜபக்சாக்களே என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.கொழும்பில் (Colombo) நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டைக் கட்டியெழுப்பும் விரிவான செயற்திட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்.

அதிபர் தேர்தல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், குடும்பங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்களை முன்வைத்துள்ளோம்.

அதிபர் தேர்தல் (Presidential Election) தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு விடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commision) வழங்கப்பட்டுள்ளது.இருப்பினும் ஒரு தரப்பினர் ஏதாவதொரு வழியில் தேர்தலை பிற்போடுவதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளார்கள்.

நாட்டை அழித்த ராஜபக்சாக்கள் ராஜபக்சாக்கள் ஒத்துழைப்பு வழங்கும் அதிபர் வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்க போவதில்லை, ஏனெனில் ராஜபக்சாக்கள் தான் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.

அதேபோல் பொருளாதார படுகொலையாளிகள், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை கொள்ளையடித்தவர்கள், உர இறக்குமதியை தடை செய்து விவசாயத்தை நிர்மூலமாக்கியவர்கள், மருந்து கட்டமைப்பை இல்லாதொழித்தவர்கள் உட்பட அனைத்து குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.இதற்கான யோசனைகளை நாங்கள் எமது கொள்கைத்திட்டத்தில் முன்வைத்துள்ளோம். இவற்றை செயற்படுத்துவதாக உறுதியளிப்பவர்களுக்கு ஆதரவு வழங்குவோம்” என தெரிவித்தார்.

Previous Post

பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை…! அமைச்சர் மனுஷ நாணயக்கார

Next Post

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தீவிரமாக்கும் 22 ஆம் திருத்தச்சட்டமூலம்

Next Post
சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தீவிரமாக்கும் 22 ஆம் திருத்தச்சட்டமூலம்

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தீவிரமாக்கும் 22 ஆம் திருத்தச்சட்டமூலம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.