Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரயில் சேவைகள் இரத்து – மக்கள் அவதி!

March 15, 2023
in இலங்கை
ரயில் சேவைகள் இரத்து – மக்கள் அவதி!

Mandatory Credit: Photo by M A PUSHPA KUMARA/EPA-EFE/Shutterstock (9787260d) Commuters wait to board a train at the Fort railway station in Colombo, Sri Lanka, 10 August 2018. Sri Lanka Railway Trade Unions including guards and locomotive drivers launched a lightning work stoppage from 3.00 pm on 08 August over their salary anomaly issues. While the work stoppage by the workers continues for the third consecutive day, authorities recalled retired personnel and by evening were able to run nine trains from the main terminal at the Fort in Colombo. Normally, there are 374 trains plying daily and catering to around 555,000 commuters. Railway strike in Sri Lanka, Colombo - 10 Aug 2018

0
SHARES
Share on FacebookShare on Twitter

பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் நேற்று 14 ஆம் திகதி இரவு புகையிரத சாரதிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக மலையகத்திற்கான இரண்டு இரவு நேர புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதனை அடுத்து புகையிரதத்தில் பயணிப்பதற்காக ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் கொழும்பு, காலி, கம்பஹா உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரை செய்த யாத்திரியர்கள் மற்றும் கொழும்பு நோக்கி புறப்பட வந்த புகையிரத பயணிகள் புகையிரதம் இரத்தச் செய்யப்பட்டதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இதனால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்க போராட்டங்கள் ஆரம்பிக்கும் போது பொது மக்களை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்கூட்டி அறிவித்திருந்தால் தாங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்திருக்கலாம் என்றும் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்தின் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் பொது மக்களுக்கு அதிர்ப்த்தி ஏற்படுவதாகவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

எது எவ்வாறாயினும் பயணிகளின் நன்மை கருதி இரவு 12 மணிக்கு பின் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் ஒன்றினை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

தொழிற்சங்க போராட்டம் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்படவிருந்து புகையிரம் ஒன்றும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த இரவு நேர இரண்டு புகையிரத சேவைகளுகம் இரத்தச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் மிதக்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் விரைவில்!!!

Next Post

நாமல் ஓர் அரசியல் அறிவில்லா ‘புரொய்லர் கோழி’- விமல் வீரவன்ஸ!

Next Post
நாமல் ஓர் அரசியல் அறிவில்லா ‘புரொய்லர் கோழி’- விமல் வீரவன்ஸ!

நாமல் ஓர் அரசியல் அறிவில்லா ‘புரொய்லர் கோழி’- விமல் வீரவன்ஸ!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.