Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணிலின் பேச்சை நம்ப முடியாது!! – சம்பந்தன் காட்டம்!!

July 27, 2022
in இலங்கை
ரணிலின் பேச்சை நம்ப முடியாது!! – சம்பந்தன் காட்டம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ராஜபக்சக்களோ அவர்களது அணியினரோ எந்தவொரு காலத்திலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியவர்கள் அல்லர். இவ்வாறானதொரு நிலையில் அவர்களின் தயவுடன் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கூறுவதை எந்த அடிப்படையில் நம்பலாம்?

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னுடைய பதவிக் காலத்தினுள் அரசியல் தீர்வைக் காண்பேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ரணில் அரசைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பவேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், ரணில், தினேஷ் ஆகியோரின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கேட்டபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

வாயால் வாக்குறுதிகளை வழங்குவதில் ராஜபக்சக்களும் அவர்களின் கட்சியினரும் வல்லவர்கள். ஆனால், அவர்கள் வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் கூட சிங்கள மக்களுக்கு ராஜபக்சக்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் அவர்களுக்கு வாக்களித்த மக்களே அவர்களை விரட்டியடிக்க வீதிக்கு வந்தனர்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எழுச்சிப் போராட்டத்தால் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் இருந்து ராஜபக்சக்கள் விலகினாலும் தற்போது அந்தப் பதவிகளுக்கு அமர்த்தப்பட்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் ராஜபக்சக்களின் கட்சியினரின் ஆதரவுடன்தான் செயற்படுகின்றார்கள்.

எனவே, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் புதிய ஜனாதிபதியும் புதிய பிரதமரும் வாயால் சொல்வதைச் செயலில் நிறைவேற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் ஆதரவு வழங்குவார்களா என்பது கேள்விக்குறியே.

புதிய ஜனாதிபதியினதும் புதிய பிரதமரினதும் செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாட்டின் நலன் கருதி – எமது மக்களின் நலன் கருதி நல்ல கருமங்களை அவர்கள் முன்னெடுத்தால் அவற்றுக்கு நாம் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

Tags: சம்பந்தன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபிரதமர் தினேஷ் குணவர்தனரணில் விக்கிரமசிங்கஜனாதிபதி
Previous Post

நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு செக்!!- தப்புமா அரசாங்கம்!!

Next Post

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நட்ட ஈடு வழங்க நீதிமன்று உத்தரவு!!

Next Post
12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நட்ட ஈடு வழங்க நீதிமன்று உத்தரவு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.