Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யுத்தத்தை தொடர்ந்து அரசியலிலும் சரத் பொன்சேகா வரலாற்று வெற்றி பெறுவார்! ரணில் நம்பிக்கை

June 28, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யுத்தத்தை தொடர்ந்து அரசியலிலும் சரத் பொன்சேகா வரலாற்று வெற்றி பெறுவார்! ரணில் நம்பிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka), யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை பதிவு செய்வார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

கொழும்பு (Colombo), தாமரை தடாகத்தில் இன்று (28) நடைபெற்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ‘இராணுவத் தளபதி நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதி’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சரத் பொன்சேகாவின் சேவை இராணுவத் தளபதியாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை.

யுத்த நிறைவு

பீல்ட் மார்ஷல் பொன்சேகா வழங்கிய வாக்குறுதிக்கமைய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்று 3 தசாப்தகால யுத்ததத்தை நிறைவு செய்தார்.

அதன் காரணமாகவே அவர் பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். இலங்கையில் பீல்ட் மார்ஷலாக செயற்பட்ட ஒரேயொரு இராணுவத் தளபதி அவர் மாத்திரமே.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்காக அங்கு இராணுவத்தின் ஒரு முழுமையான படையணி கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

அரசியல் வெற்றி

ஆனால் நான் சரத் பொன்சேகாவையே நியமித்தேன். காரணம் பொன்சேகா என்ற ஒரு நபர் ஒரு படையணிக்கு சமமானவர் என்பதால் ஆகும்.

யுத்த களத்தைப் போன்று அரசியலிலும் பல்வேறு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார். சவால்களையும் சந்தித்துள்ளார். அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அதேபோன்று எதிர்காலத்திலும் அவர் நிச்சயம் வெற்றியைப் பதவி செய்வார். எனவே அவரது சேவை நின்று விடப் போவதில்லை. நாட்டுக்கு சேவை செய்வதற்கு அவருக்கு இன்னும் பல வாய்ப்புக்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார். 

Previous Post

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்

Next Post

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

Next Post
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.