Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ். ஒருங்கிணைப்பு குழுவின் தனிக்காட்டுத்தனத்துக்கு ஆப்பு வைத்த பிரதமர்!

March 3, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ். ஒருங்கிணைப்பு குழுவின் தனிக்காட்டுத்தனத்துக்கு ஆப்பு வைத்த பிரதமர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்படவுள்ளார் என்றும் இன்று அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் நம்பகரமாக அறியமுடிகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளராக கீதநாத் காசிலிங்கம், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்படுகின்றார்.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக பல தரப்புக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், முறைப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் எல்லைமீறிச் செல்கின்றது என்றும், பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தடையாக இருக்கின்றது என்றும் பல தரப்புக்கள் குற்றஞ்சாட்டியிருந்தன.

அண்மையில் வலி.தெற்கு பிரதேச சபையிலும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரதும், அவர் சார் தரப்புக்களினதும் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மக்களின் தேவைகளை நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதேச சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பிரதமரின்பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்படவுள்ளார் என்று அறியமுடிந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது.

Tags: கீதநாத் காசிலிங்கம்பிரதமர்மஹிந்த ராஜபக்ஷயாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுயாழ்ப்பாணம்
Previous Post

இன்றைய ராசிபலன்-03.03.2022

Next Post

ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

Next Post
ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! - பொலிஸார் தீவிர விசாரணை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.