Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்ப்பாணத்தில் புழங்கும் போலி நாணயத்தாள்கள்!! – அடுத்தடுத்துச் சிக்குவோரால் அதிர்ச்சி!!

August 12, 2022
in இலங்கை
யாழ்ப்பாணத்தில் புழங்கும் போலி நாணயத்தாள்கள்!! – அடுத்தடுத்துச் சிக்குவோரால் அதிர்ச்சி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் போலி நாணத்தாள்களை அச்சிட்டு, அவற்றைப் புழக்கத்துக்கு விட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை, பன்னாலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் ஆலய சூழலில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய ஒருவர் சிலநாள்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருவர் யாழ்ப்பாணத்தில் அதேகுற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் உள்ள கடைகளுக்குச் சென்ற ஒருவர் 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வழங்கி பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். அந்த நாணயத்தாள் போலி என்பதை அறிந்த வர்த்தகர்கள் இருவர், இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசன்துறை பிராந்திய புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் 27 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: குற்றச்சாட்டுகைதுதெல்லிப்பழைபுழக்கம்போலி நாணயத்தாள்யாழ்ப்பாணம்
Previous Post

பிரிட்டன் யுவதியை வெளியேற்றும் இலங்கை! – பல தரப்புக்கள் அதிருப்தி!

Next Post

இன்றைய ராசிபலன்-13.08.2022

Next Post
இன்றைய ராசிபலன்-13.08.2022

இன்றைய ராசிபலன்-13.08.2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.