Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் வசிக்கும் அக்காவால் கனடாவில் தங்கை விபரீத முடிவு; நடந்தது என்ன!

November 11, 2023
in இலங்கை, கனடா, முக்கியச் செய்திகள்
கனேடிய அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடியின மக்கள் வழக்கு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்ணின் சகோதரியால் ஏமாற்றப்பட்ட நிலையில், அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியக்கிடைக்கையில்,

தற்கொலைக்கு குடும்பப் பெண்ணின் மூத்த சகோதரி யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றார்.

இந்நிலையில் கடந்த வருட தொடக்கத்தில் யாழ் அரியாலைப் பகுதியில் உள்ள காணி ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்வதற்காக யாழில் உள்ள சகோதரியை நம்பி 1 லட்சத்து 35 ஆயிரம் கனடா டொலரை அனுப்பியுள்ளார்.

அந்த பணத்தை கனடாவில் உள்ள பலரிடம் கடன் பெற்றே அவர் வாங்கி அனுப்பியதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சகோதரி காணியை தனது பெயரில் பதிவு செய்துவிட்டு கனடாவில் உள்ள சகோதரி மற்றும் அவரது கணவனின் பெயரில் போலியான உறுதியை தயாரித்து அனுப்பியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் கடந்த மாதம் கனடா குடும்பப் பெண்ணின் கணவன் யாழ்ப்பாணத்துக்கு வந்து காணி தொடர்பாக ஆராய்ந்த போதே அந்தக் காணி தனது பெயரில் பதிவு செய்யாது தனது மனைவியின் சகோதரியின் பெயரில் பதிவு செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின்னர் பொலிசார் மற்றும் சட்டத்தரணிகளிடம் சென்றும் பலனில்லாது போனதையடுத்து கனடா சென்ற கணவர் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

தனது சகோதரியுடன் தங்கை பேச்சுவார்த்தை நடாத்தியும் பலனில்லாது போனதை அடுத்தே தற்கொலைக்கு முயன்று அவர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அதேவேளை புலம்பெயர் தேசங்களில் எமது உறவுகள் , கடும் பனியிலும் , நித்திரையின்றியும் சேமிக்கும் பணத்தில் தாயத்தில் தனகென ஓர் இடம்வேண்டும் என்பதற்காக தமது உறவுகளை நம்பி மோசம்போன சம்பங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது.

அத்துடன் ஏமாற்றப்பட்டவர்கள் இவ்வாரு விபரீத முடிவுகளுக்கு சென்ற சம்பவங்களும் யாழ்ப்பாதணத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Suicide#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanadajaffnasrilanka
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 11-11-2023

Next Post

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு : கல்வி அமைச்சர் விடுத்த அறிவிப்பு!

Next Post
உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு : கல்வி அமைச்சர் விடுத்த அறிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.