Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மோசடிகளை மறைக்க டுபாய் நாட்டை தெரிவு செய்த கோட்டாபய?- அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்!!

July 16, 2022
in இலங்கை
மோசடிகளை மறைக்க டுபாய் நாட்டை தெரிவு செய்த கோட்டாபய?- அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தபோது, ஐக்கிய அரபு ராச்சியத்தை தனது விருப்பமான இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சர்வதேச புலனாய்வு செய்தியாளர் கூட்டமைப்பு, அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.

அவரின் இந்த விருப்பம், பாரசீக வளைகுடா நிதி மையத்துடன், ராஜபக்சர்களுக்கு உள்ள உறவுகளை கோடிட்டுக் காட்டுவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியலில் சுமார் 20 வருடங்கள் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ச குடும்பத்தின் தவறான கொள்கை காரணமாக இலங்கை,பாரிய பொருளாதார பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது.

முன்னதாக, சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு தலைமையிலான கடல்சார் நிதி தொடர்பான, பண்டோரா பேப்பர்ஸில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டன.

ராஜபக்ஷ குடும்பத்தின் நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் தொழிலதிபர் திருகுமார் நடேசனும் ரகசிய ஷெல் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை பயன்படுத்தி 18 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களையும், லண்டன் மற்றும் சிட்னியில் கலைப்படைப்புகள் மற்றும் சொகுசு சொத்துக்களை வைத்திருந்தனர் என்பதை பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தின.

2019 ஆம் ஆண்டு நிலவரப்படி நடேசன் தம்பதியரின் இரண்டு பிள்ளைகள் துபாயில் வசிப்பவர்கள் என்பதை ஐக்கிய அரபு ராச்சிய குடியுரிமை அடையாள அட்டை மற்றும் பிற பதிவுகள் என்பன உறுதிப்படுத்தின.

2016 ஆம் ஆண்டு,நடேசன் தனது ஷெல் நிறுவனங்களில் ஒன்றின் வங்கிக கணக்கைத் திறப்பதற்கான விண்ணப்பத்தில் துபாய் முகவரியை தனது வசிப்பிடமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த அக்டோபரில் தம்பதியினரின் கடல்சார் சொத்துக்கள் பற்றிய பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது அரசாங்கம் இந்த தொடர்பில் விசாரணை நடத்தும் என்று அறிவித்தார்

எனினும் அது தொடர்பில் உரிய தகவல்கள் பின்னர் வெளியாகவில்லை.

கோட்டாபய ராஜபக்சவின் இந்த உதாசீன போக்கு, அவர் தற்போது விருப்பமான இடமாக ஐக்கிய அரபு ராச்சியத்தை தெரிவுசெய்தமைக்கும், இந்த வர்த்தகங்களுக்கும், தொடர்புகள் இருப்பதை உறுதிப்படுத்துவதாக சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: அதிர்ச்சித் தகவல்இலங்கைஐக்கிய அரபு இராச்சியம்டுபாய்மோசடிகள்
Previous Post

இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு மும்முனைப் போட்டி!!

Next Post

இலங்கை பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை!!

Next Post
இலங்கையில் மூடப்பட்ட பாடசாலைகள்!!

இலங்கை பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.