Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

முதியோர் கொடுப்பனவில் மோசடி ; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம்

September 16, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
முதியோர் கொடுப்பனவில் மோசடி ; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

புத்தளம் – ஆனமடுவ பிரதேச செயகத்தில் முதியோர் கொடுப்பனவு விநியோகத்தில இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அங்கு கடமையாற்றிய பிரதம நிர்வாக அதிகாரி உட்பட ஐவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கணக்காய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பிரதம நிர்வாக அதிகாரி உட்பட ஐவரின் சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதியோர்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதியோர் கொடுப்பனவில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் நிதி முகாமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கொடுப்பனவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் உட்பட பல கிராம உத்தியோகத்தர்கள் இதுதொடர்பில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிதி மோசடி மற்றும் முறைகேடு தொடர்பாக, புத்தளம் மாவட்ட செயலாளருக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் முறைப்பாடுகள் கிடைத்ததோடு, இதுதொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவினரிடம் மாவட்ட செயலாளர் ஒப்படைத்துள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பான கணக்காய்வு பணிகளை மேற்கொண்ட மாவட்ட கணக்காய்வு பிரிவு அதிகாரிகள், ஆனமடுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் களப் பணிகளை மேற்கொண்டு, அங்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு, மாவட்ட செயலாளரிடம் முழுமையான அறிக்கையை வழங்கியிருந்தனர்.

அந்த அறிக்கையினை கவனத்தில் கொண்ட மாவட்டச் செயலாளர் இது தொடர்பான அறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இந்த நிதி மோசடிகள் தொடர்பான மேலதிக சட்டநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் ஐவரையும் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்ய புத்தளம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

புத்தளம் – கற்பிட்டியில் 700kg பீடி இலைகள் மீட்பு

Next Post

ஐக்கிய மக்கள் சக்தியின் கூற்றை நிராகரித்த ஜனாதிபதி ரணில்

Next Post
ஐக்கிய மக்கள் சக்தியின் கூற்றை நிராகரித்த ஜனாதிபதி ரணில்

ஐக்கிய மக்கள் சக்தியின் கூற்றை நிராகரித்த ஜனாதிபதி ரணில்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.