Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்!

July 24, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபா வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் (V. Radhakrishnan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தவகையில், பொருட்களின் விலை உயர்வு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு போன்ற காரணங்களால் தொழிளலார்களின் சம்பள உயர்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்ற தடை உத்தரவை காரணம் காட்டி சம்பள உயர்வை வழங்க மறுத்து வருகின்றது. இதன் காரணமாக தொழிலாளர்கள் பெரும் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வருகின்றார்கள். 

பொருளாதார பின்னடைவு 

எனவே, அவர்களுடைய விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டும். இன்று இலங்கையின் பொருளாதார பின்னடைவு காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பானது வானத்தை தொட்டிருக்கின்றது.

இதன் காரணமாக இலங்கையின் கீழ் மட்டத்தில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய அன்றாட உணவுத் தேவை உட்டபட இன்னும் பல வேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத ஒரு நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக பல வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். ஆனால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் எந்தவிதமான போராட்டமும் இல்லாமல் தங்களுடைய தொழிலை செவ்வனே செய்து வருகின்றார்கள்.

எங்களுடைய தொழிலாளர்களின் வருமானத்தின் மூலமாக ஈரான் நாட்டினுடைய ஒரு தொகுதி கடனையும் தேயிலையையும் வழங்கி அரசாங்கம் கடனை செலுத்தியுள்ளது.

சம்பள உயர்வு

ஆனால் அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடி வருகின்றது. வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் பரிந்துரை என பல விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

ஆனால் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது.

எனவே, அரசாங்கம் நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்பு கிடைக்கின்ற வரையில் தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க முன்வர வேண்டும். தொடர்ந்தும் பெருந்தோட்ட மக்கள் தங்களை அர்ப்பணித்து இந்த நாட்டிற்காக உழைத்து வருகின்றார்கள்.

நாட்டின் நிலைமை

இதனை தேர்தல் காலத்தில் மாத்திரம் வழங்கிவிட்டு நிறுத்திவிடாமல் வழக்கு நிறைவடைகின்ற வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களும் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பில் அல்லது வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினால் இந்த நாட்டின் நிலைமை என்ன.

எனவே, இதனை அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற அனைவரும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் அரசாங்கம் இடைக்கால கொடுப்பனவை வழங்குவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அது ஒரு மனிதாபிமான செயற்பாடாக கருதி இதனை செய்ய முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களுக்குத் தண்டனை: அதாவுல்லா வலியுறுத்து!

Next Post

புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

Next Post
புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.