Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

மனைவிக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்பு ; விசாரணையில் வெளியான காரணம்

September 19, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
மனைவிக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்பு ; விசாரணையில் வெளியான காரணம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜப்பானில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவிக்கு தினமும் 100 தடவைகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளார். இதனால் பாரிய மன உளைச்சலுக்குள்ளான அவரின் மனைவி காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளதுடன் இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

இவர் தனது மனைவிக்கு தினமும் 100 முறை புதுப்புது தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பினை ஏற்படுத்தியிருந்ததுடன் இவரது மனைவி மறுபக்கத்தில் இருந்து அழைப்புக்களுக்கு பதில் கொடுத்து பேசினாலும் அவர் பேசாமல் அழைப்பைத் துண்டித்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடளித்த குறித்த பெண் தனது கணவரின் நடவடிக்கைகளிலும் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது எந்தவித அழைப்புகளும் தனக்கு வரவில்லை என்றும் அதேபோல், அவர் வீட்டில் இருக்கும்போதும் அழைப்புகள் வந்தாலும், தன் கணவரின் தொலைபேசியைத் தான் உபயோகிக்கும்போதும் தனக்கு அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்ணின் கணவரை அழைத்து விசாரணை நடத்தியிருந்த காவல்துறையினர் குறித்த பெண்ணின் கணவரே இந்த அழைப்புகள் அனைத்தையும் மேற்கொண்டதனைக் கண்டறிந்துள்ளனர்.

இதன்போது வெவ்வேறு இலக்கங்களில் இருந்து தனது மனைவிக்கு தினமும் 100 ற்கும் மேற்பட்ட அழைப்புகளை மேற்கொண்டது தான் என்று அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் தன் மனைவியை அதிகமாகக் காதலிப்பதாகவும், இதன் காரணமாகவே தான் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரித்தானியாவினைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு வருடகாலம் சிறைத்தண்டனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

செவ்வாய் பெயர்ச்சியால் பணம் பெற போகும் 3 ராசிகள்

Next Post

தமிழர் பகுதியில் குப்பி விளக்கால் துரதிஷ்டவசமாக உயிரிழந்த மூதாட்டி!

Next Post
தமிழர் பகுதியில் குப்பி விளக்கால் துரதிஷ்டவசமாக உயிரிழந்த மூதாட்டி!

தமிழர் பகுதியில் குப்பி விளக்கால் துரதிஷ்டவசமாக உயிரிழந்த மூதாட்டி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.