Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்

June 28, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

2024 அஸ்வசும நலன்புரி திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய வகைகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சிறப்பு கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக மொத்தம் 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நலன்புரி நன்மைகள் சபையினால் 11.6 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

திட்டத்தின் முதல் கட்டமாக, 2023 ஜூலை முதல் 31.03.2024 வரை பாதிக்கப்படக்கூடிய பிரிவின் தகுதியான பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாயும், இடைநிலை பிரிவின் கீழ் தகுதியானவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

விசேட கொடுப்பனவு

இந்த நிலையில், தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அஸ்வசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு விசேட கொடுப்பனவுகளை செலுத்தும் காலத்தை இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை நீடிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க நலன்புரி நன்மைகள் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன் கீழ், ஜூன் 2024 மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்கவும், ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை மட்டுமே அந்த இரண்டு பிரிவினருக்கும் மாதந்தோறும் 5000 ரூபாய் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மிகவும் வறிய மற்றும் ஏழ்மையான பிரிவினருக்கு தற்போதுள்ள பணம் செலுத்தும் முறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரும் ஆணையாளருமான ஜெயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Previous Post

சஞ்சய மஹவத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது

Next Post

யுத்தத்தை தொடர்ந்து அரசியலிலும் சரத் பொன்சேகா வரலாற்று வெற்றி பெறுவார்! ரணில் நம்பிக்கை

Next Post
யுத்தத்தை தொடர்ந்து அரசியலிலும் சரத் பொன்சேகா வரலாற்று வெற்றி பெறுவார்! ரணில் நம்பிக்கை

யுத்தத்தை தொடர்ந்து அரசியலிலும் சரத் பொன்சேகா வரலாற்று வெற்றி பெறுவார்! ரணில் நம்பிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.