Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பொலிஸ் மாஅதிபர் விவகாரம் – பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், சபாநாயகர் கருத்தாடல்

July 26, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பொலிஸ் மாஅதிபர் விவகாரம் – பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், சபாநாயகர் கருத்தாடல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொலிஸ் மாஅதிபர் பதவி வெற்றிடமாக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியினால் பதில் பொலிஸ் மாஅதிபரை நியமிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று(26) தெரிவித்தார்.

பொலிஸ் மாஅதிபரின் பதவி தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறினார்.

தற்போதைய பொலிஸ் மாஅதிபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை வழங்கியுள்ள அங்கீகாரத்தை நீதிமன்றத்தினால் மாற்றியமைக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

தற்போதைய பொலிஸ் மாஅதிபருக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லை எனவும் பிரதமர் தனது விசேட உரையில் சுட்டிக்காட்டினார்.  

இதனால் குறித்த தடையுத்தரவை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமரின் உரைக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொலிஸ் மாஅதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்புக்கு அமைய  ஜனாதிபதி செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதனிடையே பொலிஸ் மாஅதிபரை நியமிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் சரியான முறையிலும் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் எடுக்கப்பட்டதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கிறார்.

பொலிஸ் மாஅதிபர் பதவியை வெற்றிடமாக்குவதாயின் அதற்கு விசேட நடைமுறைகள் காணப்படுவதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலை ஜனாதிபதியினால்கூட தீர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

தேவையேற்படின் நீதிமன்றை நாடி இந்தப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பொலிஸ் மாஅதிபர் நியமனம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று வாதப்பிரதிவாதங்கள்  இடம்பெற்ற நிலையில் சபாநாயகர் தமது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஊழல் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

Next Post

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்

Next Post
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.