Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பொருளாதார நெருக்கடி இன்னும் உக்கிரமடையும்!! ஆபத்தை உணர்ந்து செயற்படுங்கள்! – சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவுரை!!

April 6, 2022
in இலங்கை
பொருளாதார நெருக்கடி இன்னும் உக்கிரமடையும்!! ஆபத்தை உணர்ந்து செயற்படுங்கள்! – சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவுரை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவுப் பஞ்சமும் ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு ஜனநாயக ரீதியில், அரசமைப்பு ரீதியாக பொதுவானதொரு வேலைத்திட்டத்தை இந்த வாரத்துக்குள் உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் – அதைச் செயற்படுத்துங்கள் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் தலைமையில் கூடியபோது, சபாநாயகர் அறிவிப்புவேளையில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். மக்களின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்று தெரிவித்தார்.

கடும் பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப கட்டத்தில் நாடு உள்ளது, இந்நிலைமை மேலும் உக்கிரமடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாலேயே ‘ஆரம்பகட்டம்’ என நான் குறிப்பிடுகின்றேன் என்று தெரிவித்த அவர், இப்போது நிலவும் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றுக்கான தட்டுப்பாட்டை விடவும், கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் சபாநாயரக் சுட்டிக்காட்டினார்.

இந்நிலைமையை அப்படியே விடுவதா அல்லது ஓரளவேனும் கட்டுப்படுத்திக்கொள்வதா என்பது இனிவரும் நாள்களில் நாம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்த சபாநாயகர், நாடாளுமன்ற வளாகத்தை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலை பற்றியும் சபாநாயகர் விவரித்தார்.

நாடாளுமன்றம் தற்போது எதிர்கொண்டுள்ள இந்நிலைமையை ஜனநாயக வழியில் தீர்க்கலாம் என நாம் நம்புகின்றேன். அவ்வாறு முடியாமல்போனால் அதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்கடிக்கப்படும். மீண்டும் இருண்ட யுகம் உருவாகக்கூடும். எனவே, தோல்வி அடையாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

Tags: உணவுப் பஞ்சம்சபாநாயகர்நாடாளுமன்றம்பொருளாதார நிபுணர்கள்பொருளாதார நெருக்கடி
Previous Post

மஹேல தலைமையிலான தேசிய விளையாட்டுப் பேரவையும் பதவி விலகியது!

Next Post

Doctors take inspiration from online dating to build organ transplant AI

Next Post

Doctors take inspiration from online dating to build organ transplant AI

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.