Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பொருளாதார நெருக்கடிக்கு கோத்தாவே முழுப்பொறுப்பு!- நாலக கொடஹேவா குற்றச்சாட்டு!

October 19, 2022
in இலங்கை
பொருளாதார நெருக்கடிக்கு கோத்தாவே முழுப்பொறுப்பு!- நாலக கொடஹேவா குற்றச்சாட்டு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொருளாதார நெருக்கடிக்கு தாம் காரணமில்லை என்பதை காண்பிக்கும் வகையில் ஆளும் தரப்பினர் நாட்டை வலம் வருகிறார்கள். கோத்தாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, எஸ்.ஆர். ஆட்டிக்கல, லக்ஸ்மன் மற்றும் கப்ரால் ஆகியோரே நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு முதனிலை பொறுப்புதாரிகள்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமது குறைகளை மறைத்து கொள்ள பிறரை விமர்சிப்பது நகைப்புக்குரியதாகும். துறைசார் நிபுணர்களின் ஆலோசனையால் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பலவீனமடைந்தார் எனக்கூறி ஆளும் தரப்பினர்கள் நாட்டை வலம் வருகின்றனர்.

நாவலபிடி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்திலும் இவ்வாறே அவர்கள் கூறினார்கள்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் விவசாயத்துறை அமைச்சு பதவி வகித்தவர் தான் கோத்தாபய ராஜபக்சவை இரசாயன உரம் மற்றும் சேதன பசளை விவகாரத்தில் தவறாக வழிநடத்தினார்.

இரசாயன உரத்தைத் தடை செய்து, ஒரே கட்டமாக சேதன பசளை திட்டத்தை செயற்படுத்த முடியாது என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர்கள் ஆலோசனை வழங்கிய போது விவசாயத்துறை அமைச்சர் அவர்களை பதவி விலக்கி, சேதனப் பசளை திட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என ஜனாதிபதியைத் தவறாக வழிநடத்தினார்.

தற்போது இவர் பிறரே ஜனாதிபதியை ஏமாற்றினார்கள் என குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணாவிட்டால் நாட்டு மக்கள் மேலும் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் செயற்படுவதை காண முடிகிறது.

வட்டி மற்றும் வரி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். நாட்டில் பெரும்பாலான தொழிற்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றார்.

Tags: இலங்கைநாலக கொடஹேவாபொதுஜன பெரமுனபொருளாதார நெருக்கடி
Previous Post

பணவீக்கப் பட்டியலில் ஏறி, இறங்கும் இலங்கை!

Next Post

பொய்யாக முறைப்பாடு சீனப் பிரஜைக்கு சிக்கல்!

Next Post
அரச எதிர்ப்பாளர்கள் 21 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை!!

பொய்யாக முறைப்பாடு சீனப் பிரஜைக்கு சிக்கல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.