கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையில் வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ
600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காயும் பொலீஸாரால்
மீட்கப்பட்டுள்ளது.
சூட்சுமமான முறையில் கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு வெட்டுக்காடு
பகுதியில் உள்ள சிறு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட தகவல்
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்ததையடுத்து பூநகரி
பொலீஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது
கௌதாரிமுனை வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ 600 கிராம் மஞ்சள்
மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காவும் மீட்கப்பட்டுள்ளதோடு, 28
வத்துடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடத்தல் சம்பவம் 22.09.201 பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பூநகரி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றதோடு
மீட்க்கப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் கைது செய்யப்பட்ட சந்தேக
நபரையும் 223.09.2021 கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்தப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்காவிடயம்.


Discussion about this post