Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புதிய ஜனாதிபதியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட தயாராகும் இந்தியா!!

July 20, 2022
in இலங்கை
புதிய ஜனாதிபதியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட தயாராகும் இந்தியா!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் புதிதாக பதவியேற்கவுள்ள ஜனாதிபதியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா கலந்துரையாடும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே உயர்ஸ்தானிகர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே 4 பில்லியன் டொலர் வரை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலும் கூடுதல் முதலீடுகளை இலங்கைக்கு இந்தியா அறிமுகம் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தற்போதைய நெருக்கடி நிலை விரைவில் மாறிவிடும் என கோபால் பாக்லே நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

ஜனநாயக அடிப்படையில் தற்போதைய சிக்கலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, இலங்கையுடன் உரையாடியதாகவும் இலங்கையுடனான உறவுக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இலங்கை தமிழர்கள் தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளதாவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

சரியான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தமே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியிலும் இலங்கை முழுவதிலும் வளர்ச்சி ஏற்பட தொடர்ந்து இந்தியாவின் ஆதரவு இருக்கும் எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: இந்தியன் எக்பிரஸ் பத்திரிகைஇந்தியாஉயர்ஸ்தானிகர்புதிய ஜனாதிபதிபொருளாதார நெருக்கடிமக்கள்பிரச்சினை
Previous Post

இன்றைய ராசிபலன்-20.07.2022

Next Post

இலங்கையில் பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம பை! – வெளிவந்த உண்மைத் தகவல்!!

Next Post
இலங்கையில் பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம பை! – வெளிவந்த உண்மைத் தகவல்!!

இலங்கையில் பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம பை! - வெளிவந்த உண்மைத் தகவல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.