Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புதிய கட்சி மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடும் கோட்டாபய ராஜபக்ச

September 12, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
புதிய கட்சி மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடும் கோட்டாபய ராஜபக்ச
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகாவும், ஊடக உரிமையாளருமான ஒருவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சி மூலம் பாதிக்கப்பட்ட தனது பெயரை மீண்டும் கட்டியெழுப்பி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பில் அவரது சகா நேற்று அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டபோதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கின்றார் என தெரியவந்துள்ளது.

கட்சியை அவரது நெருங்கிய சகா டிலீத் ஜெயவீர சமீபத்தில் வாங்கியிருந்ததாவும் தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியின் புதிய தலைவராக ஜெயவீர பொறுப்பேற்ற பின்னர் கட்சியின் யாப்பில் மாற்றங்கள் சேர்க்கப்பட்டு புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. கட்சி தற்போது புதிய உறுப்பினர்களை இணைத்துவருகின்றதாகவும் ராஜபக்சவின் வியதமக போன்று கல்விகற்றவர்களை சேர்ப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஒக்டோபர் மாதம் ஊடகதுறையினர் மற்றும் வர்த்தக துறையினர் கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் மதிப்பினை உயர்த்தும் விதத்தில் உரையாடியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியிலேயே தற்போதை முயற்சிகள் இடம்பெறுகின்றதாகவும் தெரிய வந்துள்ளது. ராஜபக்ச தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் அதற்கு அவரது குடும்பத்தினர் உட்பட நெருக்கமானவர்களே காரணம் என இந்த குழுவினர் கிராமத்தவர்களிற்கு தெரிவித்துள்ளனர்.

கோட்டபாய ராஜபக்ச குறித்த மக்கள் கருத்தினை அறிவதற்காக கருத்துக்கணிப்புகளையும் மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் கோட்டாபய மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைத்துள்ளனரா என்பதை அறிவதற்காக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகிவரும் நிலையில் ஜெயவீர தலைமையிலான புதிய கட்சிக்கு கோட்டாபய தனது ஆதரவை வழங்குவார் என தெரியவருகின்றது.

Tags: #Gotabaya#Regain#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

முத்த சர்ச்சையில் சிக்கிய கால்பந்து சங்கத் தலைவர் ராஜினாமா

Next Post

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக யுவன் ஷங்கர் ராஜா

Next Post
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக யுவன் ஷங்கர் ராஜா

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக யுவன் ஷங்கர் ராஜா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.