இலங்கை நாவலாசிரியர் ஷெஹான் கருணாதிலக்க, 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டு தனது முதல் நாவலான ‘சைனாமேன்’ மூலம் ஷெஹான் கருணாதிலக்க இலக்கிய உலகுக்குள் நுழைந்தார்.
சைனாமேன் நாவல் கிரிக்கெட்டைப் பற்றி எழுதப்பட்ட இரண்டாவது சிறந்த நாவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புக்கர் பரிசை வென்ற Seven moons of Mali Almeida, இவரது இரண்டாவது நாவலாகும்.
அவருக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி கமிலா பார்க்கர் இந்த விருதை வழங்கினார். ஷெஹான் கருணாதிலவுக்கு 50 ஆயிரம் பவுண்ட் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய ஷெஹான் கருணாதிலக்க, “இந்தப் புத்தகத்தை உங்களுக்காக எழுதினேன். நாடு தோல்வியடைந்த நேரத்தில் கிடைத்த வெற்றி இது.
எங்கள் மக்கள் கஷ்டப்படுகிறார்கள், அதை மாற்ற என்னிடம் ஆயுதங்கள் இல்லை. ஆனால் இந்த வெற்றியை ஏற்றுக்கொண்டு இருபதுக்கு 20 உலகக் கிணக்கத்தை வெல்வோம் என்றார்.
Discussion about this post