Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரித்தானியாவில் பயிற்சிக்கு சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி மாயம்

August 19, 2024
in இலங்கை, உலகம், ஏனையவை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் புகழ்பெற்ற Sandhurst இராணுவ அக்கடமியில் பயிற்சியை நிறைவு செய்து அண்மையில் வெளியேறிய சிறிலங்கா கெடட் அதிகாரி இரண்டாம் லெப்டினன்ட் மொஹமட் அனீக்(Mohammad Aneek) நாடு திரும்பாதது தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம்(The British High Commissione) மற்றும் சிறிலங்கா இராணுவம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.இந்த அதிகாரி 44 வார பயிற்சிக்குப் பிறகு ஓகஸ்ட் 9 அன்று விடுவிக்கப்பட்டார். இதன்படி ஓகஸ்ட் 11 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வரவிருந்த போதிலும், அவர் திட்டமிடப்பட்ட விமானத்தில் திரும்பவில்லை.இராணுவ ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்சிறிலங்கா இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார, மற்றுமொரு விமானம் மூலம் இலங்கை(sri lanka) திரும்பவுள்ளதாக அந்த அதிகாரி, அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவித்தார்.

இந்த அதிகாரிக்கு ஓகஸ்ட் 11 ஆம் திகதி இலங்கை திரும்புவதற்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விமான வசதிகளை தயார் செய்திருந்த போதிலும், அவர் அன்று வரவில்லை ஆனால் பின்னர் வருவார் என தெரிவிக்கப்பட்டது.அவர் வருகை தராதது குறித்து இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காணாமற்போன அதிகாரி பிரித்தானியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவும்(Rohitha Bogollagama) இந்த உத்தியோகத்தரின் வெளியேற்ற அணிவகுப்பில் வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்திருந்தார்.

காணாமற்போன அதிகாரி மாவனல்லை இம்புல பிரதேசத்தில் வசிப்பவராவார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏனையோரையும் காணவில்லை என சமூக ஊடகங்களில் பரவிவரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என இராணுவ ஊடகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இணையத்தின் ஊடாக கடவுசீட்டு முன்பதிவு: வெளியான முக்கிய தகவல்

Next Post

இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது

Next Post
இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது

இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.