Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரபாகரனின் தாயார் சிகிச்சை பெறுவதற்காக திருச்சிக்கு வந்த போது சில அரசியல் நாடகங்களால் அவர் திருப்பி அனுப்பபட்டதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பார்வதி அம்மாள் திருச்சிக்கு சென்று சிகிச்சை எடுப்பதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் பார்வதி அம்மாவை அழைத்து வர பழ.நெடுமாறன், வைகோ உட்பட சிலர் விமான நிலயத்திற்கு சென்றதால் உளவு துறை உள்ளிட்டவர்களுக்கு விடயம் தெரிந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டு பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டார்.

இவர்கள் தங்களை விளம்பரபடுத்திக்கொள்ள அவரை வரவேற்க சென்றனர். இவர்கள் இவ்வாறு செய்யவில்லை என்றால் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற்று சென்றிருப்பார்.

இதனை தொடர்ந்து அவர் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் தெரிந்து கலைஞர்,“பார்வதி அம்மாள் வந்தது தெரியாது என்னிடம் சொல்லி இருந்தால் நான் அவரிற்கு எல்லாம் செய்து கொடுத்திருப்பேன்.” என அறிக்கை வெளியிட்டார்.

இதன் பின்னர் கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரி ஒருவர்,“எனது தாயாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.அதற்கு இந்தியாவில் அனுமதி வழங்க வேண்டும்.” என முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்த கடிதம் என் மூலமாக தான் முதல்வருக்கு அனுப்ப கிடைத்தது. இதற்காக நாம் சீமானை நாடிய போது அவர்,“நான் இப்பொழுது தான் மதுரை விமான நிலையத்திற்கு வந்தேன். இரண்டு நாள் அந்த கடிதத்தை வைத்திருங்கள் பிறகு முதல்வரிடம் கொடுக்கலாம்.” என சொன்னார்.

என்னால் இரண்டு நாள் காத்திருக்க முடியாது என கனிமொழியின் உதவியுடன் முதல்வரிடம் அந்த கடிதத்தை வழங்கினோம். ஆனால் கலைஞர் அந்த அம்மாவே கடிதம் எழுதினால் தான் அனுமதி வழங்க முடியும் என சொன்னார்.

அதன் பின்னர் பார்வதி அம்மாள் மறுபடி கடிதம் எழுதி கைநாட்டு வைத்து அனுப்பினார். அதை ஏற்று கலைஞர் சிகிச்சை பெற அனுமதி வழங்கினார்.

இதற்குள் நெடுமாறன் மற்றும் வைகோ கலைஞரிடம் கடிதம் சென்றால் அனுமதி கிடைக்கும் என தெரிந்து இலங்கையில் சிவாஜிலிங்கத்திடம் கூறி பார்வதி அம்மாளை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற வைத்தனர்.

அந்த காலக்கட்டத்தில் இலங்கை அரசாங்கம் உணவு மற்றும் மருத்துவ வசதிகளை நிறுத்தி வைத்ததால் அவருக்கு ஒழுங்கான சிகிச்சை கிடைக்காமல் சில மாதங்களில் உயிரிழந்தார்.

ஆனால் அவர் இந்தியாவில் சிகிச்சை பெற்றிருந்தால் இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பார். இதில் அரசியல் காட்சிகள் அவர்கள் சுயலாபதிற்காக செயற்பட்டமை அந்த தயாரிற்கு இழைத்த துரோகமே.” என கூறியுள்ளார்.

Tags: #ParvathiAmmal#PazhaNedumaran#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#VelupillaiPrabhakaransrilanka
Previous Post

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

Next Post

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

Next Post
கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.