Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய முன்னாள் ஆளுநரின் கணவர் : பின்னர் நடந்த சம்பவம்

September 3, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பிரதேச செயலாளரை அச்சுறுத்திய முன்னாள் ஆளுநரின் கணவர் : பின்னர் நடந்த சம்பவம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அம்பேவெல பிரதேசத்தில் அரச காணியை வழங்காததற்கு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் நிலுகா ஏகநாயக்கவின்(Niluka Ekanayake) கணவர் நேற்று (01) காலை நுவரெலியா காவல்துறை தலைமையகத்திற்கு வந்து பிரதேச செயலாளரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். நிலுகா ஏகநாயக்க மத்திய மாகாண ஆளுநராக இருந்த காலத்தில், அவரும் அவரது கணவரும் நுவரெலியாவில்(nuwara eliya) உள்ள கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள அரச காணியைப் பயன்படுத்தினர், பின்னர் அந்த நிலத்தை நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் மேயராக இருந்த வர்த்தகர் ஒருவருக்கு விற்றுள்ளனர்.காணியை வழங்குவதற்கு சட்டரீதியாக உரிமை இல்லை அந்த காணிக்குப் பதிலாக, நுவரெலியா அம்பேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் காணியை அபிவிருத்திக்காக வழங்குமாறு முன்னாள் ஆளுநரின் கணவர் நுவரெலியா பிரதேச செயலாளர் டி.ஏ.பி. தனசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த காணியை வழங்குவதற்கு சட்டரீதியாக தமக்கு உரிமை இல்லை என பிரதேச செயலாளர், முன்னாள் ஆளுநரின் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் பின்னர் குறித்த காணியை வழங்காவிடின் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பார்த்துக்கொள்வோம் என அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பிரதேச செயலாளர் நுவரெலியா தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கணவரை மன்னிக்குமாறு கேட்ட முன்னாள் ஆளுநர்இதேவேளை, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் நிலுகா ஏகநாயக்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு அளிக்குமாறும் தனது கணவரை மன்னிக்குமாறும் கேட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்கத் தயார் என அவரது கணவரும் பிரதேச செயலாளரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அதன்படி முன்னாள் ஆளுநரின் கணவர் நுவரெலியா காவல்நிலையத்திற்கு வந்து பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கோரினார். மேலும் தொலைபேசி அழைப்பை எடுக்கும்போது தான் குடிபோதையில் இருந்ததாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார்.இனிமேலும் இவ்வாறு மிரட்டமாட்டேன் என காவல்துறை புத்தகத்தில் எழுதிவிட்டு பிரதேச செயலாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

நுவரெலியா பிரதேச செயலாளருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பை விடுத்த சம்பவம் தொடர்பில் இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (30) காவல்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு

Next Post

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கால அட்டவணை வெளியானது..!

Next Post
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கால அட்டவணை வெளியானது..!

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கால அட்டவணை வெளியானது..!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.