யாழ்ப்பாணத்தில் இன்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் மற்றும் பொலிஸாரும் இணைந்து இன்று பல்பொருள் அங்காடி ,மொத்த வியாபார நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்தச் சோதனை நடவடிக்கைகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடைபெறும் என்று மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post