Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

பசிலுக்கு தலையிடியாக மாறியுள்ள லான்சாவின் கூட்டணி

August 6, 2023
in ஆய்வு கட்டுரைகள், இலங்கை, முக்கியச் செய்திகள்
பசிலுக்கு தலையிடியாக மாறியுள்ள லான்சாவின் கூட்டணி
0
SHARES
Share on FacebookShare on Twitter

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நண்பரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவிற்கும் பெரமுனவின் பலமானவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு அந்தக்கட்சியில் அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தற்போது பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மற்றும் கட்சியில் உள்ள ஒரு குழுவை இணைத்து புதிய அரசியல் கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளமையே இந்த நெருக்கடிக்கு காரணமென தெரியவருகிறது.

 

ரணிலிடம் பசில் முறைப்பாடு

பசிலுக்கு தலையிடியாக மாறியுள்ள லான்சாவின் கூட்டணி | Is Lanzas Alliance A Problem For Basil

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரமுனவைச் சேர்ந்த சிலர், நாடாளுமன்ற உறுப்பினர் லான்சா கூட்டணி அமைக்கும் விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பது கட்சிக்கு சிக்கலாக மாறியுள்ளதாக தெரிவித்ததை பசில் ராஜபக்ச, அதிபரிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கூட்டணியை கட்டியெழுப்பும் முயற்சி தீவிரம்

பசிலுக்கு தலையிடியாக மாறியுள்ள லான்சாவின் கூட்டணி | Is Lanzas Alliance A Problem For Basil

 

பெரமுனவில் இருந்து விலகிய அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பிரியங்கர ஜயரத்ன, சுசில் பிரேம ஜயந்த மற்றும் அரசாங்கத்தில் இணைந்துள்ள ஒரு குழுவினரை ஒன்றிணைத்து இந்த புதிய கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா செயற்பட்டு வருகின்றார்.

சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் இந்த கூட்டணிக்கு ஆள் திரட்ட தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அதிபரின் விசேட செயற்றிட்டங்களுக்கு நிமல் லான்சா பொறுப்பேற்றுள்ளதுடன், அவருக்கு அதிபர் அலுவலகத்தில் இருந்து அலுவலகம் மற்றும் பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: #Basil#Colombo#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

திருடிய நகையை விழுங்கிய கொள்ளையன் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

இன்றைய ராசிபலன்கள் 07-08-2023

Next Post
கிரேன் வீழ்ந்து 17 பேர் பரிதாப பலி

இன்றைய ராசிபலன்கள் 07-08-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.