Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பங்ளாதே‌ஷ் முகாம்களில் உணவுக்காக தவிக்கும் குழந்தைகள்

August 26, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பங்ளாதே‌ஷ் முகாம்களில் உணவுக்காக தவிக்கும் குழந்தைகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பங்ளாதே‌ஷில் உள்ள 33 அகதிகள் முகாம்களில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா அகதிகள் வாழ்கின்றனர்.

மோசமான கூட்ட நெரிசல், வன்முறை, உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் என பல இன்னல்களுடன் அகதிகள் அந்த முகாம்களில் வாழ்ந்து வருவதாக பங்ளாதே‌‌ஷுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் பிரிவுத் தலைவர் ஜோகனஸ் வான் டெர் கிளாவ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறித்த முகாம்களில் உள்ள குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் சட்டவிரோதச் செயல்களும் வன்முறை போன்ற நிகழ்வுகளும் அடிக்கடி நடப்பதால் அங்குள்ள குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

அனைத்துலக அளவில் உதவிகள் வேண்டும். இவர்களுக்கான கல்வி, வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். தங்கள் வாழ்க்கை, மற்ற நாடுகள் கொடுக்கும் நிதி உதவிகளைச் சார்ந்து இருப்பதை அகதிகளும் மாற்ற நினைக்கின்றனர்.

இதேவேளை, புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் குடிமக்களாகக் கருதப்படுவதில்லை. ரோஹிங்யா மக்கள் பங்ளாதே‌சைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் மியன்மாரில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

உலகளவில் நாடற்றவர்கள் பட்டியலில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். 2017 ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரோஹிங்யா மக்கள் ஆபத்தான காடுகளையும் நாஃப் நதியையும் கடந்து பங்ளாதேசுக்குள் நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

தற்போது பங்ளாதேஷில் முகாமிட்டுள்ள அகதிகள் நிரந்தரமாக அங்கிருக்கப் போவதில்லை என்பதால் அவர்கள் குடிசைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிதிப் பற்றாக்குறையால் அகதிகள் முகாமில் வாழும் ஒருவருக்குச் சராசரியாக மாதத்துக்கு 10 வெள்ளிதான் ஒதுக்கப்படுகிறது.

போதைப்பொருள், கொலை, ஆட்கடத்தல் போன்ற குற்றச்செயல்களும் முகாம்களில் நடக்கத்தொடங்கியுள்ளதால் அங்கு நிலைமை மோசமாகத் தொடங்கியுள்ளது. போதுமான அளவில் நிதி வரவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமாகக்கூடும்” எனவும் தெரிவித்தார்.

Tags: #Bangladesh#childrenstruggling#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

பிரபலபான WWE மல்யுத்த வீரர் பிரே வியாட் காலமானார்!

Next Post

கடலில் குளித்தவர்களைத் தாக்கிய ராட்சத சுறா மீன்

Next Post
கடலில் குளித்தவர்களைத் தாக்கிய ராட்சத சுறா மீன்

கடலில் குளித்தவர்களைத் தாக்கிய ராட்சத சுறா மீன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.