Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள்

August 11, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது போராட்டம் : வீதிக்கு இறங்கிய இந்துக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷின்(bangladesh) சிறுபான்மை இந்து சமூகம், மாணவர் இயக்கங்கள் என்ற போர்வையில் தங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்த போராட்டத்தால் தலைநகர் டாக்கா உட்பட பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

காலாவதியான வேலை ஒதுக்கீட்டு முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியுடன் பங்களாதேஷில் மாணவர் போராட்டங்கள் வெடித்தது.

அரசாங்கத்திற்கு எதிராக மாறிய போராட்டங்கள்

போராட்டங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாக, போராட்டங்கள் அரசாங்கத்திற்கு எதிராக மாறியது, இது பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இழப்பதில் முடிந்தது.

பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறினார், மேலும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான ஒரு காபந்து அரசாங்கம் மாணவர் ஆர்வலர்களின் தலையீட்டுடன் நியமிக்கப்பட்டது.

இருபது முதல் முப்பத்தேழு வயது வரையிலான மாணவர் இயக்கத்தின் இரண்டு தலைவர்கள் இடைக்கால அரசில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் நாடாளுமன்றத்தைக் கூட கைப்பற்றிய போராட்டக்காரர்கள் இப்போது நாட்டின் விவகாரங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

பதவி விலக வேண்டும்

தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதிபதிகளும் ஒரு மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என்று கோரி மாணவர் ஆர்வலர்கள் நேற்று(10) நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தினர்

அங்கு, முன்னாள் பிரதமருக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன், மற்ற 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் உடனடியாக தனது பதவியிலிருந்து விலகினார்.

இதேவேளை, பங்களாதேஷ் மத்திய வங்கியின் தலைவரும் நேற்று (10) பதவி விலகக் கோரி வங்கி அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.எனினும் அவரது பதவி விலகல் நிராகரிக்கப்பட்டது.இந்து சமூகத்தை குறிவைத்து தாக்குதல்இத்தகைய பின்னணியில், மாணவர் போராட்டம் என்ற போர்வையில் பங்களாதேஷின் சிறுபான்மை இந்து சமூகத்தை குறிவைத்து தாக்குதல் சம்பவங்களும் நாட்டில் பதிவாகி வருகின்றன.

ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்ந்த சில நாட்களில், நாட்டின் 52 மாவட்டங்களில் இந்து சமூகத்தை குறிவைத்து 200 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்து சமூகத்தினர் மாபெரும் போராட்டம்

இந்தத் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் கோரி, தலைநகர் டாக்கா உட்பட பல பகுதிகளில் சிறுபான்மை இந்து சமூகத்தினர் மாபெரும் போராட்டங்களை நடத்தினர்.

சிறுபான்மையினரைத் துன்புறுத்துபவர்களின் விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறுபான்மையினருக்கு நாடாளுமன்றத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களால் டாக்காவில் சாலைகள் கூட மூடப்பட்டன.

 இந்த போராட்டங்களில் 700,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், இதற்கு சில மாணவர் ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் 170 மில்லியன் மக்கள்தொகையில் 8 சதவீதம் இந்துக்கள் உள்ளனர், அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை இவர்கள் ஆதரிக்கின்றனர்.

Previous Post

கோர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயம்

Next Post

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவிப்பு

Next Post
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு - சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.