Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம்? தேர்தல் நடத்தவும் திட்டம்!

August 6, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை உடனடியாக விடுவிக்க அந்நாட்டு ஜனாதிபதி மொஹம்மட் ஷபாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தடுத்துவைக்கப்பட்டுள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீடா ஷியா மற்றும்  மாணவ செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பங்களாதேஷ் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் அந்நாட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 10,000 பேர் வரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமெனவும் விரைவில் தேர்தல் நடத்தப்படுமெனவும் குறித்த கலந்துரையாடலின்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது கவனம் செலுத்தப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், வன்முறைகளை கைவிடுமாறும் தீர்க்கமான முடிவொன்று அறிவிக்கப்படுமெனவும் பங்களாதேஷ் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

ஆர்பாட்டக்காரர்களின் கோரிக்கையாகவுள்ள அரச வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டு முறைமை திருத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதோடு இந்தியாவில் தங்கியிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோர தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பங்களாதேஷை நீண்டகாலம் ஆட்சி செய்துவரும்  ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து மாணவ தலைவர்களினால் சிவில் ஒத்துழையாமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஷேக் ஹசீனா 2009 ஆம் ஆண்டிலிருந்து பங்களாதேஷின் பிரதமராக  செயற்பட்டுவந்தார்.

இந்நிலையில் அரசாங்க வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டு முறைமையை இரத்துச் செய்யுமாறும் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த மாதம் முதல் மாணவர்களினால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவந்தன.

ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 300 பேர் உயிரிழந்ததுடன் கடந்த 04 நாட்களில் மாத்திரம் 100 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

Previous Post

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனுர குமார திசாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

Next Post

மண்சரிவு அபாயமிக்க 35 இடங்கள் அடையாளம்

Next Post
மண்சரிவு அபாயமிக்க 35 இடங்கள் அடையாளம்

மண்சரிவு அபாயமிக்க 35 இடங்கள் அடையாளம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.