Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நீதிப் போராட்டத்தில் இணையுங்கள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

August 19, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நீதிப் போராட்டத்தில் இணையுங்கள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

Sri Lankan mothers from the "Dead and Missing Person's Parents" organisation hold photographs as they takes part in a protest in Jaffna, some 400 kilometres (250 miles) north of Colombo on November 15, 2013. British Prime Minister David Cameron is flying to Jaffna, which bore the main brunt of the fighting, to meet victims of a war which raged for 37 years. AFP PHOTO/LAKRUWAN WANNIARACHCHILAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images

0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் தேசியத்தின் வழியில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களின் நீதி போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 51ஆவது ஐ.நா கூட்டத்தொடருக்கான கடிதம் தயாரிக்கும் கலந்துரையாடல் நிகழ்வு நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் வழங்க வேண்டும் என்று தமிழ்தேசியத்தின் வழியில் பயணிக்கும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள்ஆகியோருக்கு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்புக் கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடர்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 2018 மார்ச் மாதக் கூட்டத் தொடரிலிருந்து எமது சாட்சியங்களை அளித்து வருகின்றோம். கூட்டத் தொடருக்குச் செல்ல முடியாத காலத்தில் இலத்திரனியல் ஊடகம் மூலம் சாட்சியமளித்துள்ளோம்.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தொடங்கிய போராட்டத்தில் எம்முடன் இணைந்திருந்த 138 பெற்றோர்கள் தற்போது உயிருடன் இல்லை. ஆனாலும் 2 ஆயிரம் நாள்களுககு மேலாக எம் உயிரினும் மேலான, எங்கள் உறவுகளுக்கானநீதி கோரி போராடி வருகின்றோம்.

கடந்த வருடமும் மார்ச் மாதக் கூட்டத் தொடருக்காக சகல அரசியல்கட்சிகளினதும், மனித உரிமைகளில் அக்கறை கொண்ட அமைப்புகளினதும் ஒத்துழைப்புடன் ஒருமித்து எம் கோரிக்கைகள் ஜெனீவாவுக்கு மனுவாக அனுப்பப்பட்டது. அதேபோல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த 51ஆவது கூட்டத் தொடருக்கு முன்பாக நாம் அனைவரும் இணைந்து எமது கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன் வைப்பது அவசியமாகிறது.

இது தொடர்பாகக் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்து அதை செயல்வடிவமாக்குவதற்காக எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தங்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: இலங்கைஉறவினர்கள்கவனவீர்ப்புகாணாமல் ஆக்கப்பட்டோர்போராட்டம்
Previous Post

ஐ.நா. பிராந்திய பணிப்பாளரைச் சந்தித்த சஜித் பிரேமதாச

Next Post

எரிவாயு சிலிண்டருக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை?

Next Post
எரிவாயு சிலிண்டருக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை?

எரிவாயு சிலிண்டருக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.