Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நிலக்கரியுடன் 5 கப்பல்கள் முன்பதிவு

September 23, 2022
in இலங்கை
நிலக்கரியுடன் 5 கப்பல்கள்  முன்பதிவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டிற்கான நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை என லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோகஸ்தரால் செயற்திறனான முறிகள் சமர்ப்பிக்கப்படாமையே இதற்கு காரணம் என லங்கா நிலக்கரி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

37 மில்லியன் டொலா் முறிகளே செயற்திறனுடையவை எனவும் நாட்டில் காணப்படும் கடன் மற்றும் அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைய விநியோகஸ்தரால் உரியவாறு முறிகள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது விலைமனு கோரப்பட்டுள்ள சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து நாட்டிற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான விலைமனுவில் 50 வீதமான பங்கு கடந்த வருடம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் எஞ்சிய 50 வீதத்தை இந்த வருடம் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த பங்கானது டிசம்பர் மாத்திற்கு பின்னர் பெற்றுக்கொள்ளப்படவிருந்த போதிலும் நாட்டில் காணப்படும் நிலைமை காரணமாக விரைவாக அதனை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, தலா 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதின் முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டிற்கான நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள விநியோகஸ்தரிடமிருந்து நிலக்கரியை கொள்வனவு செய்யும் போது, ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரிக்கு 30 டொலர் இலாபம் கிடைக்குமென லங்கா நிலக்கரி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: இலங்கைஎரிபொருள்கப்பல்கள் முன்பதிவுநிலக்கரிநிலக்கரி கையிருப்பு
Previous Post

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பாக வெளியான தகவல்

Next Post

ரவிகரன் உட்பட இருவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று

Next Post
ரவிகரன் உட்பட இருவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று

ரவிகரன் உட்பட இருவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.