Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

நிரம்பி வழியும் மருத்துவமனைகளும் பிரேத அறைகளும்; கண்ணீர்விடும் காசாமக்கள்

October 30, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
நிரம்பி வழியும் மருத்துவமனைகளும் பிரேத அறைகளும்; கண்ணீர்விடும் காசாமக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் , தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கான வாய்ப்புகளையும் பறிப்பதாக பாலஸ்தீனியர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரே – ஹமாஸ் போரில் உயிரிழந்தவர்களின் உடல்களால் மருத்துவமனைகளும் பிரேத அறைகளும் நிரம்பிவழிவதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாகவும் இடைவிடாத தொடர்ச்சியான விமானக்குண்டுவீச்சு காரணமாகவும் இறுதிநிகழ்வுகளும் நினைவுகூருவதும் சாத்தியமற்ற விடயங்களாக மாறியுள்ளன.

ஏற்கனவே காணப்படும் புதைகுழிகளை தோண்டி அகலமாக்கவேண்டிய நிலை
புதியவர்களை புதைப்பதற்காக ஏற்கனவே காணப்படும் புதைகுழிகளை தோண்டி அகலமாக்கவேண்டிய நிலையில் குடும்பங்கள் காணப்படுகின்றன.

மருத்துவமனைகளில் இடமின்மை காரணமாக மருத்துவமனை பணியாளர்கள் உடல்களை புதைத்த பின்னரே உறவினர்களிற்கு தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இஸ்ரேலின் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்கள் எவராவது கொல்லப்பட்டால் அவர்களை அடையாளம் காண்பதற்காக குடும்ப உறுப்பினர்களின் கரங்களில் பிரஸ்லட் அணிவிக்கும் நடைமுறை கடந்த சில நாட்களாக காசாவில் உள்ளவர்கள் மத்தியில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை மனதை கலகடிக்கின்றது.

குழந்தைகள் சிறுவர்களின் கைகால்களில் மார்க்கர்களால் அவர்களின் பெயர்களை எழுதுகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக முற்றுகையிடப்பட்டுள்ள காசாமீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் உலக அரங்கில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

8000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களில் 3300 பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றது.

மேலும் 1650 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாகவும் அவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் எனவும் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: #Hamaswar#Israel#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஒன்று திரண்ட அரச ஊழியர்கள் : பாரிய போராட்டம் முன்னெடுப்பு

Next Post

காசாவில் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது

Next Post
காசாவில் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது

காசாவில் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.