கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களின் குரல்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச செவிமடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, ஏனைய கட்சிகள் இணங்கினால் 6 மாதங்களுக்கு இடைக்கா அரசாங்கம் அமைக்க மக்கள் விடுதலை முன்னணி தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசைப் பொறுப்பேற்க மக்கள் விடுதலை முன்னணி தயாராக உள்ளது என்றும், அதன்பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னர் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பல தரப்புகளுடன் பேச்சு நடத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post