Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

நாய் வளர்ப்போருக்கு கனேடிய அரசு அவசர எச்சரிக்கை

August 27, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
நாய் வளர்ப்போருக்கு கனேடிய அரசு அவசர எச்சரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் செல்லப் பிராணிகளை குறிப்பாக நாய்களை வளர்ப்போருக்கு, நாய்களை கட்டி வளர்க்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், காலை நேர உடற்பயிற்சியின் போது, நாயடகள பொதுவாக அனைவரும் அழைத்து வருவது வழமை.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், சிறுவர்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நாய்கள் கடிப்பதாக அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாய்கடி சம்பவங்கள் அண்மைக் காலமாக டொரன்டோவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீயின் விளைவாகவும் இரு்கலாம் எனவும் அந்நாட்டு அரசு அஞ்சுகின்றது.

காரணம் தீயை கண்டால் நாய்களுக்குள் எழும் இனம்புரியாத பயம் மற்றும் பதற்றநிலை காரணமாக நாய்கள் இவ்வாறு அருகில் இருப்பவர்களை கடிப்பதற்கு முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, நாய்களை வளர்க்கும் நபர்கள் அவற்றை கட்டி வளர்க்க வேண்டும் எனவும் நாய்களை கட்டுப்படுத்தி வளர்ப்பது அதன் உரிமையாளர்களின் பொறுப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் டொரன்டோவில் 1316 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் சிறுவர்கள் மாத்திரம் 300ற்கும் அதிகமாக காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இது கடந்த 2021 ஆம் ஆண்டை விடவும் 39 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நாய்களை கட்டி வளர்க்காத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு 365 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #canadiangovernment-#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#WarningCanada
Previous Post

இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீடு குறித்து வெளியான முக்கிய தகவல்!

Next Post

செல்வராகவனுடனான விவாகரத்து பற்றி பேசிய சோனியா அகர்வால்

Next Post
செல்வராகவனுடனான விவாகரத்து பற்றி பேசிய சோனியா அகர்வால்

செல்வராகவனுடனான விவாகரத்து பற்றி பேசிய சோனியா அகர்வால்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.