Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நன்னடத்தை பாடசாலை சிறுவனின் மர்ம மரணம்; பெண் மேற்பார்வையாளர் கைது

December 3, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நன்னடத்தை பாடசாலை சிறுவனின் மர்ம மரணம்; பெண் மேற்பார்வையாளர் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில்
அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர்
நன்னடத்தை பாடசாலையில் ஒலி எழுப்பும் மணி ஒன்றை களவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் நவம்பர் 17ஆம் திகதியன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் குறித்த  சிறுவன் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் தங்க
வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில்
மரணமடைந்தவர் மட்டக்களப்பு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 17 வயது சிறுவன் என
அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக கடந்த புதன்கிழமை (2023.11.29) அதிகாலை 3.30 மணியளவில் தமக்கு
அறிவிக்கப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் குறித்த சிறுவனின் உடலில் அடி காயங்கள்
காணப்படுவதாகவும் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதற்கமைய, குறித்த சிறுவனை அன்றையதினம் தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க குறித்த பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மகனின் மரணத்தில் பல விதமான பொய்
குற்றச்சாட்டுகளையும் பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தாம் எமது பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள் யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: #Arrested#Mysterious#Schoolboy#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

100 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பறவை!

Next Post

பசில் மற்றும் கோட்டாவின் குடியுரிமையை பறிக்கலாம் – கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி

Next Post
பசில் மற்றும் கோட்டாவின் குடியுரிமையை பறிக்கலாம் – கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி

பசில் மற்றும் கோட்டாவின் குடியுரிமையை பறிக்கலாம் - கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.