Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

தொழிநுட்பத்திற்க்காவும், முதலீட்டுக்காகவும் வளங்களையும், நிலங்களையும் அந்நியர்களுக்கு தாரை வார்க்கலாமா என – பூநகரி கடற்றொழிலாளர்கள் கேள்வி எமுப்பியுள்ளனர்.

August 2, 2021
in முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளிக்குடாவில்
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச மீனவர
சங்கங்களுடனான கலந்துரையாடல் ஒன்று (01)நேற்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி பூநகரி பிரதச செயலகத்திற்குட்பட்ட கௌதாரி முனையில்
அமைக்கப்பட்டுள்ள கடல்அட்டை பண்ணை தொடர்பில் இதன் போது
கலந்துரையாடப்பட்டது.

 குறித்த கலந்துரையாடலின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்   இலங்கையை
பொறுத்த வரையில் எமது ஆட்சியாளர்கள் எங்களுடைய  வளங்களை பல நாடுகளுக்கு
விற்கின்ற அதே வேளை பல நாடுகள் எமது வளங்களை சூரையாடுவதற்கு வழி
வகுத்துள்ளனர் அதே வேளையில் சீனாவின் அதிகரித்த ஆதிக்கம் வடக்கில்
காணப்படுகின்ற அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கிறது.

 கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப்பிரதேச கௌதாரி முனையில் மீனவ சங்கங்களே
அறியாமல் அவர்களது அனுமதியும் இல்லாமல் சீன பிரஜைகள் இரண்டு ஏக்கருக்கு
உட்பட்ட காணிகளுக்குள்ளே அட்டைக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான பண்ணைகளை
உருவாக்கியிருப்பது யாருடைய அனுமதி பெற்று இதை இவர்கள்
செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகமான கேள்வியை உருவாக்கியுள்ளது.

 கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அண்மையில் கருத்து  தெரிவித்த
போது கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணை எங்களுக்கு தொழில்நுட்பத்தையும்
முதலீடையும் தருவதாக இருக்கிறது ஆகவே அவர்கள் சீன பிரஜைகளா அல்லது வேறு
நாட்டு பிரஜைகளா என்பதல்ல எங்களுக்கு முக்கியம் முதலீடும்
தொழில்நுட்பமும் எங்களுக்கு முக்கியம் என்று கூறியிருந்தார் அவ்வாறானால்
தொழில்நுட்பத்திட்கும்,முதலீட்டுக்காகவும் எங்களுடைய நிலத்தை மற்றவருக்கு
தாரைவார்த்து அல்லது விற்பது சரியான விடயமா என்று நாங்கள்
பார்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் அபிவிருத்தி
என்ற போர்வையில் எங்களுடைய வளங்களை மற்றவர்களுக்கு கொடுக்கின்ற
முயற்சிகளில் முயல்கின்றதா என்ற கேள்வி எங்களுக்குள்ளே இருப்பதாகவும்
தெரிவித்திருந்தார்.

  நிகழ்வில் வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் வீ.சுப்பிரமணியம் , தேசிய
மீனவர் ஒத்துழைப்பு இயக்க வட கிழக்கின் இணைப்பாளர் அன்ரனி
ஜேசுதாசன்,பூநகரி கடற்றொழிலாளர் சமாச தலைவர் யோசப் பிரான்சிஸ் மற்றும்
மீனவ சங்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.

Previous Post

திடீரென தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நபர் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

Next Post

அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கும் அரசாங்கம் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம்.

Next Post

அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கும் அரசாங்கம் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.