Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

September 15, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் பிரசாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (National Child Protection Authority) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது ​தொடர்பாக ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெரியவர்களின் உதவி, தலையீடு அல்லது வற்புறுத்தலுடன் இந்தத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பிரசார நடவடிக்கைதேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் பங்கேற்பதால் விபத்துக்கள் அல்லது உடல் மற்றும் மன உளைச்சல்களுக்கு உள்ளாக நேரிடும் என அதிகார சபை எச்சரித்துள்ளது

அவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தமது அதிகார சபைக்குள்ளதெனவும் இதனால் அந்த பொறுப்புகளை தாமதமின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் 

இலங்கை அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனத்தில் கையொப்பமிட்டு அதில் அங்கம் வகிப்பதுடன் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளதாக அந்த சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

எனவே, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை அனைவரின் பொறுப்பாகக் கருதி தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் பங்கேற்பதைத் தடுக்குமாறு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post

ஞானக்காவிற்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் : விசாரணையில் அம்பலமான தகவல்

Next Post
ஞானக்காவிற்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் : விசாரணையில் அம்பலமான தகவல்

ஞானக்காவிற்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் : விசாரணையில் அம்பலமான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.