தீபாவளி தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 11 வயது சிறுமி உட்பட ஏழு பேர் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் சாவகச்சேரிப் பகுதியில் தீபாவளி தினமான நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
தாக்குதலில் நாவற்குளி தச்சன்தோப்பு , கொடிகாமம் , மிருசுவில் வடக்கு , மட்டுவில் தெற்கு ஆகிய இடங்களைச் சேர்ந்த 11 வயதான சிறுமி, பெண் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Discussion about this post