Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதல்: பின்னணியில் இலங்கை புலனாய்வு பிரிவா?

September 18, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதல்: பின்னணியில் இலங்கை புலனாய்வு பிரிவா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

தியாகி திலீபனின் உருவப்படத்தை சுமந்து வந்த வாகன பேரணி மீதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என அந்த கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ஒருவன் செய்தி பிரிவுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எதற்காக பாதுகாப்பு இன்றி குறித்த பேரணியில் கலந்துகொண்டார் என எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் பாதுகாப்பை ஏற்பதில்லை.

குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் எம்.எஸ்.டி, பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை, ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை.

தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பை மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு படையினரை எங்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பயன்படுத்தியதில்லை.

இதனிடையே, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வாகனத்தை பழுது பார்க்காமல் அவ்வாறே யாழ்ப்பாணம் வரையில் பொது மக்களின் பார்வைக்காக கொண்டுச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வாகனம் பயன்படுத்த முடியாத அளவிற்கு தாக்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: #Investigation#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#thileepanmemorialsrilanka
Previous Post

இங்கிலாந்து விசா கட்டண உயர்வு!

Next Post

விநாயகர் சதுர்த்தி ; 12 ராசியினரும் இந்த மந்திரத்தினை உச்சரித்தால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்

Next Post
விநாயகர் சதுர்த்தி ; 12 ராசியினரும் இந்த மந்திரத்தினை உச்சரித்தால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்

விநாயகர் சதுர்த்தி ; 12 ராசியினரும் இந்த மந்திரத்தினை உச்சரித்தால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.