Wednesday, May 14, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திருக்கோணேஸ்வரத்தில் திருட்டு போன தாலி : ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

August 12, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
திருக்கோணேஸ்வரத்தில் திருட்டு போன தாலி : ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் ஆளுநருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (11) செந்தில் தொண்டமானால் யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது.

அங்கு கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான ஏற்பாடு தன்னால் செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெறுமதியான தாலி

இதையடுத்து, சோழர் காலத்து பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி ஒன்று களவு போய் உள்ளது என தெருவித்ததோடு தொடர்ந்து கூட்டத்தை முடித்து பொது மக்களுக்கு கேள்வி கேக்க வாய்ப்பு வழங்காமல் செல்ல முயன்றுள்ளார்.

இந்தநிலையில், கூட்டத்துக்கு வருகை தந்த திருகோணமலை (Trincomalee) சேர்ந்த ஆயுள் கால உறுபினர்கள் தமது கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த காரணத்தால் பின்வரும் கேள்விகள் மற்றும் விளக்கங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

சோழர் காலத்து நகைதொடர்ந்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, “2009 ஆம் ஆண்டு நீதிமன்றதால் நிர்வாக சபையிடம் கோவிலை ஒப்படைக்கும் போது இப்படியான சோழர் காலத்து நகை என்ற ஒன்று இருக்கவில்லை, கடந்த சிவராத்திரி நிகழ்வில் ஆலயத்துக்கு சொந்தமான அனைத்து அசையும் அசையா சொத்து விபரங்களும் பெரிய திரையில் மக்கள் பார்வைக்கு காண்பிக்கபட்டது அதில் எங்குமே சோழர் காலத்து நகை என்ற ஒன்று எங்குமே இருக்கவில்லை அவ்வாறு இருக்க இப்படி சோழர் காலத்து நகை திருட்டு என்று செய்தி வெளியிட பின்னணி என்ன ?

திருகோணமலையில் தீர்க்கபட வேண்டிய கன்னியா மற்றும் கோணேசர் ஆலய சட்டவிரோத கடைகள் என்று எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது அதை பார்க்காமல் இந்த மூன்று பவுண் தாலி விடயத்தை தூக்கி பிடித்த யாப்புக்கு முரணான கூட்டத்தின் நோக்கம் என்ன ?

குடியியல் நீதிமன்றில் ஆலயம் தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது எழுத்து மூலம் எந்த அறிவித்தலும் இல்லாமல் இப்படி ஒரு சட்டத்துக்கு முரணான அவசர கூட்டம் கூட்ட வேண்டிய தேவை என்ன ?” என  மக்கள் கேள்வியெழுப்ப பதில் கூற முடியாத செந்தில் தொண்டமான் வெளியே சென்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த விமல் வீரவன்ச: வெளியிட்டுள்ள காரணம்

Next Post

கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

Next Post
கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.