Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம்

September 16, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிருப்பு பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டனர்.

174 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 

இது குறித்து அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழுகின்ற பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்ற மக்கள் போராட்டமானது இன்றோடு 174 வது நாளாகவும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.

ஆனாலும் எமது மக்கள் போராட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த பல அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சார் தீர்மானங்களை முடிவுகளை எடுக்கக்கூடிய நபர்கள் மூலமாகவும் அரசுக்கு பல்வேறு செய்திகளை நாங்கள் வழங்கி இருந்தோம்.

இந்தப் போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ எதிரானது கிடையாது என்பதையும் இது ஒரு அரச நிர்வாக ரீதியான கட்டமைப்பை சீர் செய்வதற்கான போராட்டம் மாத்திரமே என்பதையும் வெளிப்படுத்துகின்றோம்.

இந்த நாட்டில்  ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி எனும் அடிப்படையில் தீர்வை வழங்கக்கூடிய உயர் அதிகாரத்தில் இருக்கும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எமது வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததுடன் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டோம்.“ என  குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

தமிழ்ப்பொது வேட்பாளருடன் முக்கிய கலந்துரையாடலில் மாவை

Next Post

தனது முன்னாள் மனைவிக்காக நடிகர் தனுஷ் செய்த லேட்டஸ்ட் விஷயம்… வைரலாகும் போட்டோ

Next Post
தனது முன்னாள் மனைவிக்காக நடிகர் தனுஷ் செய்த லேட்டஸ்ட் விஷயம்… வைரலாகும் போட்டோ

தனது முன்னாள் மனைவிக்காக நடிகர் தனுஷ் செய்த லேட்டஸ்ட் விஷயம்... வைரலாகும் போட்டோ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.