Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழ்த் தேசத்தை அங்கீகரித்தால் நாட்டுக்கு முன்னேற்றம்!!- கஜேந்திரன் தெரிவிப்பு!!

July 28, 2022
in இலங்கை
தமிழ்த் தேசத்தை அங்கீகரித்தால் நாட்டுக்கு முன்னேற்றம்!!- கஜேந்திரன் தெரிவிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தேர்தலுக்குச் செல்லுங்கள். தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வாருங்கள். அப்போது நீங்களும் நாங்களும் சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யலாம்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அரசிடம் இன்று இடித்துரைத்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

39 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி அன்று கல்வி அமைச்சராக இருந்தபோது அவரின் மாமனார் ஜனாதிபதியாக இருந்த வேளையில் சகல அதிகாரங்களையும் கைகளிலேயே வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

தமிழர்களின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு, மக்கள் கொல்லப்பட்டனர். இப்போது 39 வருடங்களாகியுள்ளன. அன்று உங்களின் காடையர்கள் எங்களின் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திக் கொடூரமாக நடந்துகொண்டபோது அதற்கு எதிராகச் செயற்பட்டவர்களைப் பயங்கரவாதிகள் என்றீர்கள். இதனை ஒடுக்க சட்டங்களை இயற்சி நடவடிக்கை எடுத்தீர்கள். அதன் விளைவு இன்றும் இருக்கின்றது.

தமிழருக்கு எதிராக நீட்டிய துப்பாக்கிகள் சிங்களவர்களுக்கு எதிராகவும் திரும்பும் என்று எங்களின் தலைவர் அன்று கூறியிருந்தார். இந்த நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. உங்களின் கைகளால் உங்களின் மக்களின் கண்களில் குத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், மக்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தில் ஏதோவொரு வகையில் அந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக இந்த அவசரகாலச் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளீர்கள். இது உங்களின் மக்களுக்கு எதிரான மோசமான இரத்த ஆற்றுக்கான வழியை ஏற்படுத்தும் என்பதனையும் கூறிக்கொள்கின்றோம்.

இந்த நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் தேர்தலுக்கு செல்வதன் ஊடாக மட்டுமே உங்களின் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தி நாடாளுமன்றமாக இது இருக்கும்.

கோட்டாபய ராஜபக்சவுக்கே மூன்றில் இரண்டு அதிகாரம் வழங்கப்பட்டது. அவரையே மக்கள் வெளியேற கூறிவிட்டார்கள். அப்படியென்றால் அவர்கள் உங்களின் அரசுக்கான ஆணையையே மீளப் பெற்றுவிட்டார்கள் என்றே கூற வேண்டும்.

இதனால் தொடர்ந்தும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு செயற்பட்டால் நீங்கள் பாசிச ஆட்சியையே செய்கின்றீர்கள். நாட்டுக்காகத்தான் பேசுகின்றீர்கள் என்றால் தேர்தலுக்குச் செல்லுங்கள். இல்லையென்றால் போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டியே கைதுசெய்யப்படுவார்கள்.

நாங்கள் போதியளவு அனுபவங்களைக் கொண்டுள்ளோம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான கொடூரங்களை அனுபவித்துள்ளோம். அதற்காக சிங்களவர்களும் அதனை அனுபவிக்க வேண்டும் என்று கூறவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தேர்தலுக்குச் செல்லுங்கள்.

தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வாருங்கள். அப்போது நீங்களும் நாங்களும் சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யலாம் எனவும் கஜேந்திர குமார் குறிப்பிட்டார்.

Tags: இலங்கைகஜேந்திரன்சமஷ்டி அரசமைப்புதமிழ்த் தேசம்நாடாளுமன்றம்
Previous Post

இலங்கை மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

Next Post

இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட Fitch Ratings!!

Next Post
இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட Fitch Ratings!!

இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட Fitch Ratings!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.