Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழர் பகுதியில் தொடரும் நில ஆக்கிரமிப்பு: பெளத்த பிக்குவால் ஏற்பட்டுள்ள குழப்பம்

July 27, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

திருகோணமலை(Trincomalee) – இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகளை அப்பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி துப்பரவு செய்வதால் அப்பகுதியில் பதற்ற நிலை எழுந்துள்ளது.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி குச்சவெளியான் குளத்துக்கு பொதுமக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்புரவு செய்து வருவதாகவும் அப்பகுதியிலுள்ள காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காணி உரிமையாளர்கள்இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் குச்சவெளி காவல் நிலையத்தில் (25) முறைப்பாடு செய்துள்ள நிலையில் ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளதாக குச்சவெளி பிரதேசத்திற்கு பொறுப்பான அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார் .

குறித்த காணிகள் துப்புரவு செய்யப்படுவதை வயலுக்கு சென்ற விவசாயிகளினால் அவதானிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து நேற்றையதினம் (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நிலங்கள் ஆக்கிரமிப்புஇலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் இடம் பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்து வருவதாகவும் இந்நிலையில் தமது நிலங்களை ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் பௌத்த பிக்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம் மற்றும் அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக காணப்படுவதாகவும், வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை அணியின் மற்றுமொரு வீரர்

Next Post

எச்.ஐ.விக்கு தடுப்பு மருந்து: கண்டுபிடித்துள்ள தென்னாபிரிக்க ஆய்வாளர்கள் !

Next Post
எச்.ஐ.விக்கு தடுப்பு மருந்து: கண்டுபிடித்துள்ள தென்னாபிரிக்க ஆய்வாளர்கள் !

எச்.ஐ.விக்கு தடுப்பு மருந்து: கண்டுபிடித்துள்ள தென்னாபிரிக்க ஆய்வாளர்கள் !

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.