Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழர் தலைநகரில் தாக்குதலுக்குள்ளான நகரசபை ஊழியர்

June 30, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
தமிழர் தலைநகரில் தாக்குதலுக்குள்ளான நகரசபை ஊழியர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

திருகோணமலை பகுதியில் நகரசபை ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

திருக்கோணேச்சரம் ஆலயத்தை அண்மித்த கடைத்தொகுதி ஒன்றில் தடை செய்யப்பட்ட கசிப்பு ரக மதுபானம் விற்பனை செய்யப்பட்ட கடையானது இன்று (30) திருகோணமலை நகரசபையினரால் அரக்குமுத்திரையிடப்பட்டு பூட்டப்பட்ட போதே குறித்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த வாரம் திருகோணமலை (Trincomalee) – திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினை அண்மித்த கடையொன்றில் தடை செய்யப்பப்பட்ட கசிப்பு வகை மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கருதப்பட்டு அந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகரசபை 

இந்த நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றைய தினம் (30) அந்த கடைக்கு அரக்குமுத்திரையிடப்பட்டு, பூட்டப்பட்டதாக திருகோணமலை நகரசபை செயலாளர் தே.ஜெய விஷ்ணு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அப்பகுதிக்கு நகரசபை அதிகாரிகள் விரைந்து கடையை அரக்குமுத்திரையிட முற்பட்டபோதே அங்கு இனம் தெரியாத நபர் ஒருவரால் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு, நகரசபை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பொது வைத்தியசாலை

இந்த நிலையில், அவர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நகரசபை செயலாளர் கூறியுள்ளார்.

மேலும், சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த காவல்துறையினரும் தாக்குதலை தடுக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளளார். 

Previous Post

விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள்: நாமல் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

ஹிருணிக்காவின் சிறைதண்டனைக்கு எதிரான பிணை தொடர்பில் புதிய நடவடிக்கை

Next Post
ஹிருணிக்காவின் சிறைதண்டனைக்கு எதிரான பிணை தொடர்பில் புதிய நடவடிக்கை

ஹிருணிக்காவின் சிறைதண்டனைக்கு எதிரான பிணை தொடர்பில் புதிய நடவடிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.