Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழகத்தில் கைதான இலங்கையர்கள்

May 1, 2024
in இலங்கை
தமிழகத்தில் கைதான இலங்கையர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இராமநாதபுரம் – வேதாளை பகுதியைச் சேர்ந்த 4 பேர் நேற்றிரவு (30-04-2024) தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் 4 பேர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கியிருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இருவரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று கொண்ட 2 பேர் வேதாளை பகுதியை சேர்ந்த இன்னொரு நபரை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் தம்பதிகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்ட இருவருமாக 4 பேரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தம்பதிகள் நேற்றிரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா தப்பி செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ஆறு பேர் என மொத்தமாக எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.

தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் உள்ள 8 பேரிடம் மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் கைதான 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

தோட்டத் தொழிலார்களுக்கு சம்பள உயர்வு!

Next Post

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Next Post

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.