Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஊழல் வழக்குத் தாக்கல்!

October 11, 2022
in இலங்கை
ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஊழல் வழக்குத் தாக்கல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு ஊழல் வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்றுக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குற்றப்பத்திரிகைகளுக்கு எதிராக பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம் என்று பாதுகாப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இந்த வழக்கு நவம்பர் 1ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கை சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை 2011 காலகட்டத்தில் தேர்தல் பணிக்காக வேலைக்கு அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த ஊழல் வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக இந்த ஊழல் வழக்கை தாக்கல் செய்தார்.

முதலாம் குற்றவாளியான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சட்டவிரோதமான முறையில் சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளுக்காக ஈடுபடுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 5 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

Tags: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுஊழல் வழக்குகுற்றப்பத்திரிகைகொழும்பு மேல் நீதிமன்றம்ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
Previous Post

இன்றைய ராசிபலன் – 11.10.2022

Next Post

நாமலுக்கு அமைச்சுப் பதவி – ரணில் எடுத்துள்ள தீர்மானம்!

Next Post
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதிரடி தீர்மானம்

நாமலுக்கு அமைச்சுப் பதவி - ரணில் எடுத்துள்ள தீர்மானம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.