Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

July 17, 2024
in இலங்கை
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது. 

2015ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அதனை மக்கள் கருத்துக்கணிப்பினூடாக நிறைவேற்றுவது அவசியமென குறிப்பிடப்படவில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று மீளவும் வலியுறுத்தியுள்ளது. 

இந்த வழக்குக்கான 5 இலட்சம் ரூபா செலவை மனுதாரர் செலுத்த வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர, பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் கருத்துக்கணிப்பின் ஊடாக அது நிறைவேற்றப்படும் வரை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். 

அத்துடன் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் கருத்துக்கணிப்பிற்கு உட்படுத்துமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் தமது மனுவில் கோரியுள்ளார். 

மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவும் அதன் உறுப்பினர்களும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் சட்டமா அதிபரும் பெயரிடப்பட்டிருந்தனர்.

Previous Post

விரைவில் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

Next Post

ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சிடும் பணிகளின் பாதுகாப்பிற்காக நாளாந்தம் 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை – அரச அச்சகம்

Next Post
ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சிடும் பணிகளின் பாதுகாப்பிற்காக நாளாந்தம் 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை – அரச அச்சகம்

ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சிடும் பணிகளின் பாதுகாப்பிற்காக நாளாந்தம் 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை - அரச அச்சகம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.