Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

October 3, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இந்த சந்திப்பானது இன்று (03) பிற்பகல் ப்ளவர் வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த சகல தரப்பினரும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமையல் எரிவாயு சின்னத்தில் போட்டியிடுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அனுமதி வழங்கியுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுதல் அந்த ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக நேற்று (02) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியின் ஊடாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமையல் எரிவாயு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான கலந்துரையாடல் எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கான சபை ஸ்தாபிப்பது என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இடம்பெறும் கலந்துரையாடல்களை உத்தியோகபூர்வமாகக் கைவிடுவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இந்தியாவில் இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம்

Next Post

விபத்தில் சிக்கிய தம்பதியின் ஏ.டி.எம். அட்டையை திருடி பொருட்கள் கொள்வனவு; கான்ஸ்டபிளின் மோசமான செயல் !

Next Post
விபத்தில் சிக்கிய தம்பதியின் ஏ.டி.எம். அட்டையை திருடி பொருட்கள் கொள்வனவு; கான்ஸ்டபிளின் மோசமான செயல் !

விபத்தில் சிக்கிய தம்பதியின் ஏ.டி.எம். அட்டையை திருடி பொருட்கள் கொள்வனவு; கான்ஸ்டபிளின் மோசமான செயல் !

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.