Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனவரி முதல் அதிகரிக்கப்படவுள்ள அரச துறை ஊழியர்களின் சம்பளம் : வெளியான தகவல்

September 1, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஜனவரி முதல் அதிகரிக்கப்படவுள்ள அரச துறை ஊழியர்களின் சம்பளம் : வெளியான தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அடுத்த வருடம் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி அலுவலக உதவியாளர்கள், சாரதிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் மருந்தாளுனர்கள், செவிலியர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் சம்பளங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய தரம் III அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 5450 ரூபாவினாலும், தரம் II அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 8,760 ரூபாவினாலும், தரம் I அலுவலக உதவியாளரின் மாதாந்த சம்பளம் 10,950 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது

சாரதிகளின் சம்பளம்அத்துடன் தரம் III சாரதியின் சம்பளம் 6,960 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், தரம் II சாரதியின் சம்பளம் 9,990 ரூபாவினாலும், தரம் I சாரதியின் சம்பளம் 13,020 ரூபாவினாலும் சிறப்பு தர ஓட்டுநருக்கு 16,340 ரூபா சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளது.

தரம் III சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்/விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களுக்கு 8,340 ரூபாவும், தரம் II உதவியாளர்களுக்கு 11,690 ரூபாவும் தரம் I உதவியாளர்களுக்கு 15,685 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.முகாமைத்துவ உதவியாளரின் மாதச் சம்பளம் தரம் IIIக்கு 10,140 ரூபாவும், தரம் IIக்கு 13,490 ரூபாவும், தரம் Iக்கு 17,550 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தரம் III, II மற்றும் Iக்கு முறையே 12,710 ரூபா, 17,820 ரூபா, 25,150 ரூபா சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் சம்பளம்மேலும், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர்களின் தரம் III பிரிவினரின் சம்பளம் 12,885, ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், தரம் IIக்கு 17,945 ரூபாவும், தரம் Iக்கு 25,275 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.கதிரியக்க நிபுணர்கள் மற்றும் மருந்தாளுனர்களின் தரம் IIIக்கு 13,280 ரூபாவும், தரம் IIக்கு 18,310 ரூபாவும், தரம் Iக்கு 25,720 ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது.

தரம் III, II மற்றும் I செவிலியர்களின் சம்பளம் முறையே 13,725, 18,835 மற்றும் 26,165 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.பாடசாலை அதிபர்களின் III, II, I தரங்களுக்கான சம்பளம் முறையே 23,425 ரூபா, 29,935 ரூபா மற்றும் 39,595 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.ஐந்து பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் 17,480 ரூபாவினாலும், பட்டதாரி ஆசிரியர்களின் சம்பளம் 19,055 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இந்தி படத்தில் மீண்டும் நடிக்கப்போகும் ராஷ்மிகா மந்தனா.. வெளியான புது அப்டேட் இதோ…

Next Post

தேர்தல் விஞ்ஞாபனத்தை இலவசமாக விநியோகிக்க வாய்ப்பு : வெளியான அறிவிப்பு

Next Post
தேர்தல் விஞ்ஞாபனத்தை இலவசமாக விநியோகிக்க வாய்ப்பு : வெளியான அறிவிப்பு

தேர்தல் விஞ்ஞாபனத்தை இலவசமாக விநியோகிக்க வாய்ப்பு : வெளியான அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.