Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சினிமாப்பாணியில் நடந்த நகைக் கடைக் கொள்ளை!- வெளிநாட்டவர் இருவருக்கு வலைவீச்சு!!

May 29, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வீட்டில் இருந்த தம்பதியரை கொடூரமாக தாக்கி கொள்ளை முயற்சி!- புளியம்பொக்கணையில் சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென்னிலங்கையில் வெளிநாட்டவர்கள் இருவர், சினிமா பாணியில் மேற்கொண்ட பெரும் கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலி, களுவெல்ல பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு நகைகளைக் கொள்வனவு செய்வது போன்ற வெளிநாட்டு பிரஜைகள் இருவரே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான 28 தங்க நகைகளை மோசடியான முறையில் கொள்ளையிட்டுள்ளனர் என்று காலி பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு பிரஜைகள் இருவரும் கடந்த 24ஆம் திகதி மதியம் முச்சக்கர வண்டியில் இரண்டு சிறிய பைகளுடன் நகைக்கடைக்கு வந்துள்ளனர்.

ஒரு பையில் தங்க நகைகளைப் போன்ற போலியான நகைகள் இருந்துள்ளன. மற்றொரு பை வெறுமையாக இருந்துள்ளது.

இருவரும் நகைக் கடையில் உள்ள மேசையில் இரு பைகளையும் வைத்துவிட்டு நகைக்கடை உரிமையாளரிடம் தங்க நகைகளின் விலைகளை விசாரித்துள்ளனர்.

நகைகளை பரிசோதித்துவிட்டு சிறிது நேரம் கழித்து 28 தங்க நெக்லஸ்களை வாங்கிக் கொள்கின்றோம் என்று நகைக் கடையின் உரிமையாளரிடம் வெளிநாட்டவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

கொள்வனவுக்குத் தெரிந்தெடுத்த 28 தங்க நெக்லஸ்களை அவர்கள் இருவரும் தமது வெற்று பையில் வைத்துள்ளனர்.
அப்போது, நகைகளின் கரட் அளவைச் சரிபார்க்க வேண்டும் என்று நகைக்கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

அதையடுத்து வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும், பையை மேசை மீது வைத்து விட்டு கடைக்கு வெளியே சென்றுள்ளனர். பையைச் சோதனையிட்டபோது, அந்த நகைகள் போலியானவை என்று தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும் சாதுரியமாகப் பையை மாற்றி நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

வெளிநாட்டு பிரஜைகள் இருவரில் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: சினிமாப்பாணிநகைக் கடைக் கொள்ளைவலைவீச்சுவெளிநாட்டவர்
Previous Post

சின்னஞ் சிறு சிறுமியை குதறிய கயவர்கள்! – சடலமாக மீட்கப்பட்ட ஆயிஷா – நடந்தது என்ன?

Next Post

ஐம்பது எரிபொருள் நிலையங்கள் பூட்டு!

Next Post
ஐம்பது எரிபொருள் நிலையங்கள் பூட்டு!

ஐம்பது எரிபொருள் நிலையங்கள் பூட்டு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.