Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு- காய்ச்சல் பிடித்த அம்பிட்டிய

October 19, 2023
in ஆய்வு கட்டுரைகள், இலங்கை, முக்கியச் செய்திகள்
சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு- காய்ச்சல் பிடித்த அம்பிட்டிய
0
SHARES
Share on FacebookShare on Twitter

இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய விடயத்தை எமது இந்நாட்டிலுள்ள 200க்கும் அதிகமான முதுகெலும்பு அற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை என சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி எழுப்பி இருந்தார் இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவரது முகநூல் பதிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த துறவிகளை மயிலத்தமடு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறுவதற்கு இவர் யார்? உழவு இயந்திரம் செல்லக்கூடாது, பௌத்த துறவிகள் செல்லக்கூடாது, சிங்கள மக்கள் செல்லக்கூடாது என்கின்ற இவர் தனியாக பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு மாகாணம்.

நாங்கள் அரச பாதுகாப்பு படை, புலனாய்வுத் துறையினர் சொல்லுவதையும் கேட்க வேண்டும் அரசியல்வாதிகள் சொல்வதையும் கேட்க வேண்டும் கல்விமான்கள் கூறுவதையும் கேட்க வேண்டும்.

சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு மாகாணம்..! காய்ச்சல் பிடித்த அம்பிட்டிய | Batticaloa Issue Ampitiya Sumanarathna

ஆனால் சாணக்கியன் சிங்கள மக்களை துவேஷமாக பேசுவதையும் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா? இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் சூட்சமான முறையில் இந்த பிரச்சினையை நாங்கள் கையாள வேண்டும் என்று எங்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

பௌத்த துறவிகள் என்ற ரீதியில் இலங்கை அரச புலனாய்வுத் துறையினரின் பேச்சுக்களை நாங்கள் காது கொடுத்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் தொடர்ச்சியாக இந்த சாணக்கியன் என்கின்ற நபர் நாடாளுமன்றத்தில் கதாநாயகனாக மாறிக்கொண்டிருக்கின்றார்.

இவருக்கு இந்த பலத்தை கொடுத்தவர்கள் தமிழ் மக்கள் ஆகவே இந்த சிங்கள பௌத்த நாடு என்ற ரீதியில் பௌத்த துறவிகள் திபுலபத்தான மட்டக்களப்பில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்வதற்கு இது சாணக்கியனின் நாடா?

சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு மாகாணம்..! காய்ச்சல் பிடித்த அம்பிட்டிய | Batticaloa Issue Ampitiya Sumanarathna

சாணக்கியன் இன்று நாடாளுமன்றத்தில் பேசியது போல மீண்டும் ஒரு ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடக்கும் நடக்கலாம்.

ஆனால் எங்களது சிங்கள மக்களுக்குள்ள பிரச்சினையை நாங்கள் ஒவ்வொன்றாக அதிபருக்கு சுட்டிக்காட்டுகின்ற போதிலும் அதிபர் எங்களை ஏமாற்றுகின்ற செயற்பாட்டில் தான் ஈடுபட்டு கொண்டு வருகின்றார்.

அதிபர் அவர்கள் நாட்டை விட்டு செல்வதற்கு முன்பதாக காவல்துறைமா அதிபருக்கு வழங்கியுள்ள ஆலோசனை இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களை நாட்டை விட்டு வெளியேறுவதற்காகவா?

அதிபர் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவாராக இருந்தால் நேருக்கு நேர் முகத்துக்கு முகம் மோதுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

சிங்கள பேரினவாதம்

நான் இப்போது கூறுவதை பாதுகாப்பு படையினர் அரச புலனாய்வுத் துறையினர் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் இருக்கின்றீர்கள் என்று நான் நம்புகின்றேன்.

சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு மாகாணம்..! காய்ச்சல் பிடித்த அம்பிட்டிய | Batticaloa Issue Ampitiya Sumanarathna

 

சாணக்கியனின் நடவடிக்கை தொடருமாக இருந்தால் வைக்கப்பட்ட புத்த சிலை அகற்றப்பட மாட்டாது விவசாயம் செய்கின்ற மக்கள் அகற்றப்பட மாட்டார்கள் தொடர்ச்சியாக இராசமாணிக்கம் அதிபரை ஆசை வார்த்தைகள் காட்டி சிங்கள மக்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பாராக இருந்தால் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் சிங்கள மக்களுக்கு எதிராக பேசுகின்ற பேச்சுக்கு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை இந்த சோம்பேறி பிடித்தவர்களுக்கு நாங்கள் ஒன்றை சொல்ல விரும்புகின்றோம் பாதுகாப்பு படையினரின் கதையை கேட்டு நாங்கள் அந்த சிலையை அகற்ற நினைத்தோம் ஆனால் இப்போது சொல்கின்றோம் இனி எந்த கொம்பனாலும் அங்கு எதுவும் செய்ய முடியாது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: #Ampitiya Sumanarathna#batticaloa#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

கோட்டாபய அறையில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு சாட்சியம் இல்லை

Next Post

நாகை – காங்கேசன்துறை கப்பலில் தங்கம் கடத்தல்

Next Post
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’

நாகை - காங்கேசன்துறை கப்பலில் தங்கம் கடத்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.